செய்திகள் :

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரிப்பு!

post image

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.27 அடியாகவும் உயர்ந்தது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்துவரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பிய நிலையில் உள்ளன.

கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

உபரி நீர்வரத்து காரணமாக நேற்று(ஜூன் 26) காலை வினாடிக்கு 18,290 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 37,263 கன அடியாகவும், இன்று(ஜூன் 27) காலை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று காலை 112.73 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.27 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 84.22 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காவிரி கரையோரங்களில் முகாமிட்டிருந்த மேட்டூர் அணை மீனவர்கள் தங்களது முகாம்களை மேடான பகுதிக்கு கொண்டு சென்றனர்.

நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அடிபாலாறு செட்டிபட்டி உள்ளிட்ட முகாம்களில் உள்ள மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை.

இதையும் படிக்க...அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! - டிரம்ப் சூசகம்

Mettur Dam water flow has increased to 43,892 cubic feet per second. The water level of Mettur Dam rose by 1.27 feet in a single day.

முதல்வர் அதிமுகதான்; ஆனால் கூட்டணி ஆட்சி! - அமித் ஷா

தமிழ்நாட்டில் கண்டிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் எனவும் அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில்... மேலும் பார்க்க

பரந்தூரில் புதிய ரயில் நிலையம் அமைக்க பரிசீலனை! - ரயில்வே இணை அமைச்சர்

பரந்தூரில் புதிய ரயில் நிலையம் அமைப்பது பரிசீலனையில் உள்ளதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கூறியுள்ளார்.மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சோமண்ணா காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையத்தை ஆய்வு செய்த... மேலும் பார்க்க

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த சில நாள்கள் அருவிகளில் குளிக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லத் தடை!

யானைகள் முகாமிட்டுள்ளதால் கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்ட... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார். கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செய்தியாளர்கள் சந்... மேலும் பார்க்க

'நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்' - அமித் ஷாவுக்கு கனிமொழி பதில்

ஹிந்தி பற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிலளித்துள்ளார். தில்லியில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்... மேலும் பார்க்க