செய்திகள் :

புரி ஜெகந்நாதர் கோயிலில் "பஹந்தி" சடங்கு தொடக்கம்!

post image

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று(ஜூன் 27) காலை கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகந்நாதர் கோயிலில் வருடாந்திர ரத யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்தாண்டுக்கான ரத யாத்திரை இன்று காலை மிகவும் விமரிசையாகத் தொடங்கிய நிலையில், ரத யாத்திரைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் "பஹந்தி" சடங்கு தொடங்கியது.

பஹந்தி சடங்கு முன்னதாக காலை 9.30 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தாது. இருப்பினும் அது ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது, இந்த சடங்கு மூன்று மணி நேரம் தொடரும்.

பஹந்தியில் மும்மூர்த்திகளான பாலபத்திரர், தேவி சுபத்ரா மற்றும் ஜெகந்நாதர் ஆகியோர் கோயில் சன்னதியிலிருந்து சுமார் 2.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ கண்டிச்சா கோயிலுக்குச் செல்வதற்காக சிங்க வாயிலுக்கு முன்னாள் நிறுத்தப்பட்டுள்ள அந்தந்த ரதங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.

மக்களின் கோஷங்கள் நடவில், சங்குகளும், தாளங்கள் முழங்கச் சக்ரராஜ சுதர்னம் முதலில் பிரதான கோயிலிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டது.

ஸ்ரீ சுதர்சனம் என்பது புரியில் ஜெகந்நாதர் வடிவில் வணங்கப்படும் பகவான் விஷ்ணுவின் சக்கர ஆயுதம் ஆகும். ஸ்ரீ சுதர்சனத்தைத் தொடர்ந்து ஜெகந்நாதரின் மூத்த சகோதரர் பாலபத்ரர் சிலை கொண்டுவரப்பட்டது. பாலபத்ரர் "தலத்வஜ" தேரில் அமர்ந்துள்ளார்.

ஜெகந்நாதர் மற்றும் பாலபத்ரரின் சகோதரியான சுபத்ரா தேவி "சூன்ய பஹந்தி" என்ற சிறப்பு ஊர்வலத்தில் "தர்பதாலன்" தேருக்கு அழைத்து வரப்பட்டார்.

இறுதியாக ஜெகந்நாதர் கோயிலிலிருந்து வெளியே வந்தபோது, ​​பக்தர்கள் 'ஜெய் ஜெகந்நாதர்' என்று கைகளை உயர்த்தி பலத்த கரகோஷத்துடன் கிராண்ட் ரோடு வழியாகக் கொண்டு வரப்பட்டன.

வழிநெடுகிலும் ஒடிசி நடனக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல குழுக்கள் வந்திருந்தனர்.

"இறைவன் என்னைப் பார்க்க அருள் செய்தால் என் வாழ்க்கை நிறைவடையும்" என்று ஒடிசி நடனக் கலைஞரான மைத்ரி மகேஸ்வரி கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தின் ஆஷாட சுக்ல திதியின் இரண்டாவது நாளில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இது ரத்ன சிங்கசனத்திலிருந்து நகைகளால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனத்திலிருந்து இறங்கிய பிறகு உடன்பிறந்த தெய்வங்கள் பஹந்தி என்றழைக்கப்படும் விரிவான வடங்கில் பைசி பஹாச்சா என்றழைக்கப்படும் 22 படிகள் வழியாகக் கோயிலிலிருந்து சிலைகளை வெளியே கொண்டுவரும் நிகழ்வாகும்.

பஹந்தி சடங்கிற்கு முன், 'மங்கள ஆரத்தி' மற்றும் 'மைலம்' போன்ற பல வழக்கமான சடங்குகள் நடத்தப்பட்டு, கோயிலின் கருவறையிலிருந்து தெய்வ சிலைகளை வெளியே கொண்டுவருவதற்கு முன்பு நடத்தப்பட்டன.

மூன்று கம்பீரமான ரதங்களும் கோயிலின் சிங்க துவாரத்தின் முன் கிழக்கு நோக்கி கண்டிச்சா கோயிலை நோக்கி நிமிர்ந்து நிற்கின்றன. பஹந்தியைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி, கஜபதி திப்யசிங்க தேப் பிற்பகல் 3.30 மணிக்கு 'சேரபஹன்ரா' (தேர்களைத் துடைத்தல்) நிகழ்த்துவார், பின்னர் மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி நிரலின்படி தேர் இழுக்கப்படும்.

இதற்கிடையில், ஜெகநாதர் மற்றும் அவரது உடன்பிறப்புகளின் வருடாந்திர ரத யாத்திரையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஏற்கனவே புனித யாத்திரை நகரமான புரியில் குவிந்துள்ளனர்.

ஒடிசா காவல்துறை, மத்திய ஆயுதக் காவல் படை, என்எஸ்ஜி உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் பணியாளர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் திருவிழா நடைபெறுகிறது.

ரத யாத்திரையை சீராக நடத்துவதற்கு அனைத்து சாத்தியமான ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக டிஜிபி ஒய் பி குரானியா செய்தியாளர்களிடம் கூறினார், 275-க்கும் மேற்பட்ட செய்யறிவு(ஏஐ) இயக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் கூட்டத்தைக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

The 'Pahandi' ritual in which Lord Balabhadra, Devi Subhadra and Lord Jagannath are being carried in a procession from the 12th-century temple to their respective chariots for the Rath Yatra started on Friday.

ஹிமாசலில் திடீர் வெள்ளம்: இதுவரை 5 சடலங்கள் மீட்பு

ஹிமாசலில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹமாசலில் காங்க்ரா மற்றும் குலு மாவட்டங்களில் புதன்கிழமை மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இ... மேலும் பார்க்க

அரசியலமைப்பை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்: ராகுலுக்கு ஜெய்சங்கர் அறிவுரை!

அரசியலமைப்பு புத்தகத்தைக் கையில் எடுப்பதில் எந்தப் பயனுமில்லை. அதனை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக விமர்சித்த... மேலும் பார்க்க

நொய்டாவில் சட்டவிரோத முதியோர் இல்லத்தில் இருந்து 42 முதியவர்கள் மீட்பு

நொய்டாவில் சட்டவிரோத முதியோர் இல்லத்தில் இருந்து 42 முதியவர்கள் மீட்கப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 55, சி-5 இல் உள்ள ஆனந்த் நிகேதன் விருதா சேவா ஆசிரமத்தின் முதியோர் இல்லத... மேலும் பார்க்க

அதிகளவில் நீர்ப் பயன்பாடு! விவசாயத்துக்கும் வரி விதிக்கும் மத்திய அரசு?

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க, விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்ட... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: மீண்டும் ஒரு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை?

மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு கொல்கத்தாவில் காஸ்பா பகுதியில் மாநில... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ஓர் கூமாபட்டி..! திடீர் இன்ஸ்டாகிராம் வைரலால் திக்குமுக்காடிய மலைக் கோட்டை!

மகாராஷ்டிரத்தின் மலை உச்சியில் உள்ள கோட்டைக்கு ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத அளவில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திடீர், திடீரென இணையத்தில் வைரலாகும் இடங்கள... மேலும் பார்க்க