செய்திகள் :

திமுகவுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்

post image

திமுகவுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக அண்மையில் மதுரையில் நடத்தியது உண்மையான முருகர் மாநாடு கிடையாது. திருச்செந்தூரில் நடைபெறக்கூடிய கும்பாபிஷேகம் பக்தர்களுக்குப் பொதுவானது. முருகருடைய அருள் எங்களுக்குத்தான் கிடைக்கும்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் முருகர் மாநாடு நடத்தினால், முருகர் எப்படி அவர்கள் பக்கம் போவார்?. எங்களுடைய கூட்டணி முறையாக அமைந்திருந்தால் இன்று அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். தொடர்ந்து திமுக வெற்றி பெற்ற வரலாறு கிடையாது. வரலாறு மாறப்போவதில்லை.

அதனால் அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மேலும், குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயமாக விரும்ப மாட்டார்கள். தமிழகத்தில் திமுகவுக்கு தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி பற்றி அமித்ஷாவும், அதிமுகவின் பொதுச்செயலாளர் பழனிசாமியும் பேசுவார்கள்.

தமிழக முதல்வராக எடப்பாடியார் வருவார் என்று இப்போது பேசக்கூடாது. அமித்ஷா ஏற்கெனவே அவருடைய தலைமையில் ஆட்சி அமையும் என்று சொல்லியிருக்கிறார் என்றார்.

SUMMARY

BJP leader Nainar Nagendran has said that the DMK is afraid of elections.

ஜூலை 7-ல் அமித் ஷா சென்னை வருகை! ஆனால், இபிஎஸ் இல்லை?

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகை நாளிலேயே எடப்பாடி பழனிசாமியும் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் அக்கட்சித் தலைமை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூன் 27) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், பு... மேலும் பார்க்க

கைதாகிறாரா எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி ?

சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தைச் ... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸின் தேர்தல் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி... மேலும் பார்க்க

அதிமுகவில் வடசென்னை வடக்கு (மேற்கு), கன்னியாகுமரி மாவட்டச் செயலர்கள் மாற்றம்

அதிமுகவில் வடசென்னை வடக்கு (மேற்கு), கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் விடுத்துள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்கன்னியாகுமரி ... மேலும் பார்க்க

அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு! அமித் ஷா மீண்டும் வாக்குறுதி!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில், நயினார் நாக... மேலும் பார்க்க