செய்திகள் :

AR Rahman: "ரஹ்மான் ஒரு வெளிச்சம்; பள்ளி சிறுவன் போல இருக்கிறார்" - இசைப் புயலை வியந்த இந்தி பாடகி!

post image

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான லெஜண்டரி இந்தி பாடகியான அனுராதா பாவுத்வாலுடன் இரண்டு பாடல்கள் மட்டுமே பணியாற்றியுள்ளார்.

“Kissa Hum Likhenge” (காதல் கடிதம் தீட்டவே மெட்டு) மற்றும்  “Pa Jaye Kismat Se Tum Humko Mile Ho” (மலரோடு மலரிங்கு மெட்டு) ஆகிய இரண்டு பாடல்களும் இன்றளவும் ரசிகர்களால் மனதில் நிற்கும் கல்ட் கிளாசிக்குகளாக உள்ளன.

Anuradha Paudwal

சமீபத்தில் யூடியூப் தளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அனுராதா பவுத்வால், ரஹ்மானைப் புகழ்ந்தும், அவர் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதம் பற்றி சிலாகித்தும் பேசியுள்ளார்.

Rahman-ன் அரிய திறமை!

"இசை ஒரு விளக்கைப் போன்றது. ஒருவர் அதற்கான ஸ்விட்சைப் போட்டதும், ஒவ்வொரு மூலை முடுக்கும் வெள்ளிச்சமாகிவிடும். நான் இதை ரஹ்மான்ஜீயிடம் பார்த்திருக்கிறேன். அவரது சொந்த வேலைகள் மட்டுமல்லாமல், தன்னைச் சுற்றியிருப்பவர்களும் இசையில் செழிக்க வேண்டுமென எண்ணுவார்." எனப் பாராட்டினார் அனுராதா.

"நான் ஒருநாள் ரஹ்மான்ஜீயின் ஸ்டூடியோவில் இருந்தேன். அங்கே ஒரு சின்ன பெண் ரெகார்டிங்கில் பாடிக்கொண்டிருந்தார். அந்த பெண் நல்ல முகபாவத்துடனும் குறிப்புடனும் அழகாக பாடிக்கொண்டிருந்தார். அவரிடம் ரஹ்மான் எதை எப்படிப் பாட வேண்டும் எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.

ரஹ்மான்
ரஹ்மான்

அது ஒரு பெரிய கலை. அவர்களுக்கு என்ன வேண்டும், நீங்கள் எதைத் தவறவிடுகிறீர்கள் என்பதைச் சொல்வது. நீங்கள் சரியாக எதைத் தவறவிடுகிறீர்கள் என்பதை அவர்கள் சரியாக உணர்ந்தால் மட்டுமே அப்படிச் சொல்ல முடியும். அது அவரது ஸ்டூடியோவில் பார்த்த மிக அரிதான ஒரு திறமை" எனக் கூறியுள்ளார்.

ரஹ்மான் மாணவர்களுக்கு அளிக்கும் பயிற்சிகள் பற்றிப் பேசியவர், "ரஹ்மானின் பள்ளியில் இருந்து வரும் மாணவர்கள் வேற லெவல் தயார்நிலையில் வருகின்றனர். சாதாரண ஆட்களுக்கு இது எல்லாமே தெரியாது.

ரஹ்மான் மிகவும் அடக்கமான, நல்ல மனிதர். எவ்வளவோ உயரங்களை அடைந்தபிறகும், ஒரு அப்பாவி பள்ளிக் குழந்தைப் போல இருக்கிறார். எந்தவித ஆடம்பரமோ, மேனிபுலேட் செய்வதோ கிடையாது. அவரைப் போன்ற எளிய மனிதர்களைப் பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது.

இந்த தரம் தான் அவரது இசையிலும் வெளிப்படுகிறது. அதனால்தான் பொதுமக்கள் அவரது இசையை நெருக்கமாக உணர முடிகிறது." எனக் கூறியுள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரூ.3.40 கோடியில் மேலும் ஒரு புல்லட் புரூஃப் கார் வாங்கிய சல்மான் கான்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்றபோது அபூர்வ வகை மான்களை வேட்டையாடி சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். அந்த அபூர்வ வகை மான்களை பிஷ்னோய் இன மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதன... மேலும் பார்க்க

Amir khan: "60 வயதிலும் ஓர் இணையைக் கண்டடைய உதவியது இதுதான்" - மனம் திறந்த ஆமிர் கான்

கடந்த மார்ச் மாதம் நடந்த பிறந்தநாள் விழாவின்போது, தனது கேர்ள் ஃபிரண்டை உலகுக்கு அறிமுகப்படுத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் ஆமிர் கான்.60 வயதிலும் ஒரு காதலைக் கண்டடைய தனது மனநல சிகிச்சைகள் ... மேலும் பார்க்க

Cyber Crime: அமிதாப் பச்சனின் விழிப்புணர்வு வாய்ஸ் மெசேஜ்; நெட்டிசன்களின் எதிர்ப்பால் நீக்கம்

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன. இது த... மேலும் பார்க்க

ஷாருக் கானின் மன்னத் பங்களா புனரமைப்பில் விதி மீறலா? - வனத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு!

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மும்பை பாந்த்ராவில் உள்ள மன்னத் பங்களாவில் வசித்து வருகிறார். இப்பங்களா மிகவும் பழமையானது ஆகும். எனவே எந்த பணிகள் மேற்கொள்வதாக இருந்தாலும் மாநகராட்சியிடம் ஒப்புதல் பெறவேண்ட... மேலும் பார்க்க

Sitaare Zameen Par Review: உள்ளத்தைத் தொடும் கவிதை; நெகிழ வைக்கும் ஃபீல் குட் டிராமா!

கூடைப்பந்து பயிற்சியாளரான குல்ஷனுக்கு (ஆமிர் கான்) முன்கோபமும் ஈகோவும் அடிக்கடி எட்டிப்பார்க்கும் மனோபாவம். ஒரு பிரச்னையில் தன்னுடைய சீனியர் கோச்சை அவர் அடித்துவிட, கூடவே அன்று இரவே குடித்துவிட்டு ஒரு... மேலும் பார்க்க