செய்திகள் :

Amir khan: "60 வயதிலும் ஓர் இணையைக் கண்டடைய உதவியது இதுதான்" - மனம் திறந்த ஆமிர் கான்

post image

கடந்த மார்ச் மாதம் நடந்த பிறந்தநாள் விழாவின்போது, தனது கேர்ள் ஃபிரண்டை உலகுக்கு அறிமுகப்படுத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் ஆமிர் கான்.

60 வயதிலும் ஒரு காதலைக் கண்டடைய தனது மனநல சிகிச்சைகள் உதவியதாக வெளிப்படையாகப் பேசியுள்ளார் ஆமிர் கான்.

தெரபி தன்னை உறுதியாக உணர்ச்சி ரீதியிலான சமநிலையுடன் வைத்திருந்தாலேயே, கௌரி ஸ்ப்ராடுடனான அவரது பிணைப்பு ஆரோக்கியமானதாகவும், அமைதியானதாகவும் வளர்ந்ததாக சமீபத்திய உரையாடலில் கூறியுள்ளார்.

Amir khan - Gauri Spratt

தெரபி

ஆமிர் கான் கடந்த 4 ஆண்டுகளாக தெரபி சந்திப்புகளுக்குச் சென்றுவருவதாகவும், தெரபி மூலம் தனிமனிதராக அவர் அடைந்த வளர்ச்சி, கௌரியுடனான உறவு சிறப்பானதாக இருக்க உதவியதாகவும் கூறியுள்ளார்.

அவரது தனிப்பட்ட வாழ்க்கைத் தேர்வுகளில் தெரபியின் தாக்கம் பற்றி பேசிய அவர், "ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பது போன்ற அடிப்படையான ஒன்றை எடுத்துக்கொள்வோம். நான்கு ஆண்டு தெரபிக்கு பிறகு இப்போது ரெட் ஃப்ளாகுகள் ஒரு மைல் தூரத்துக்கு அப்பால் இருந்தால்கூட என்னால் கண்டுபிடிக்க முடிகிறது" எனக் கூறியுள்ளார்.

ஆமிர் கான்

"கௌரி இப்போது முற்றிலும் வேறொரு ஆமிரைப் பார்க்கிறார். நன்கு குணமடைந்த ஒருவன். கொஞ்சம் நிம்மதியாக, கொஞ்சம் மேம்பட்டவனாக இருக்கிறேன் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார் ஆமிர்.

முன்னாள் மனைவிகளுக்கு நன்றி!

மேலும் ஆமிர் கான் தனது முன்னாள் மனைவிகள் ரீமா தத்தா மற்றும் கிரண் ராவ் பற்றி நன்றியுணர்வுடன் பேசியுள்ளார். அவர்களது திருமண உறவு முறிந்தபோதும் அவர்கள் ஊக்கத்துக்கும் அரவணைப்புக்கும் ஆதாரமாக விளங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒருவர் மற்றொருவர் மீதான வியப்பும், பரஸ்பர மரியாதையும் பிரிவுக்குப் பிறகும் நெருக்கமான அர்த்தமுள்ள உறவு தொடர அனுமதித்ததாகக் கூறியுள்ளார்.

இந்த உறவுகள் தனித்துவமானது என ஒப்புக்கொண்ட அவர், இரு உறவிலும் கசப்போ, வெறுப்போ இல்லை எனக் கூறியுள்ளார்.

Cyber Crime: அமிதாப் பச்சனின் விழிப்புணர்வு வாய்ஸ் மெசேஜ்; நெட்டிசன்களின் எதிர்ப்பால் நீக்கம்

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன. இது த... மேலும் பார்க்க

ஷாருக் கானின் மன்னத் பங்களா புனரமைப்பில் விதி மீறலா? - வனத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு!

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மும்பை பாந்த்ராவில் உள்ள மன்னத் பங்களாவில் வசித்து வருகிறார். இப்பங்களா மிகவும் பழமையானது ஆகும். எனவே எந்த பணிகள் மேற்கொள்வதாக இருந்தாலும் மாநகராட்சியிடம் ஒப்புதல் பெறவேண்ட... மேலும் பார்க்க

Sitaare Zameen Par Review: உள்ளத்தைத் தொடும் கவிதை; நெகிழ வைக்கும் ஃபீல் குட் டிராமா!

கூடைப்பந்து பயிற்சியாளரான குல்ஷனுக்கு (ஆமிர் கான்) முன்கோபமும் ஈகோவும் அடிக்கடி எட்டிப்பார்க்கும் மனோபாவம். ஒரு பிரச்னையில் தன்னுடைய சீனியர் கோச்சை அவர் அடித்துவிட, கூடவே அன்று இரவே குடித்துவிட்டு ஒரு... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள The Hunt - The Rajiv Gandhi Assassination Case (வேட்டை - ராஜீவ்காந்தி கொலை வழக்கு) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக... மேலும் பார்க்க

Sitaare Zameen Par: குரோசவா இன்பிரேஷன்;ஆமீர் கான் இயக்குநரான கதை! - 'தாரே ஜமீன் பர்' ரீவிசிட்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ஆமீர் கானின் 'சித்தாரே ஜமீன் பர்'. 2007-ல் ஆமீர் கானின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான 'தாரே ஜமீன் பர்' திரைப்படத்திற... மேலும் பார்க்க