செய்திகள் :

Cyber Crime: அமிதாப் பச்சனின் விழிப்புணர்வு வாய்ஸ் மெசேஜ்; நெட்டிசன்களின் எதிர்ப்பால் நீக்கம்

post image

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன.

இது தவிர பங்குச்சந்தையில் அதிக லாபம் என்பது உட்பட பல்வேறு காரணங்களைக் கூறி ஆன்லைனில் மோசடி செய்வது அதிகரித்து இருக்கிறது. இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு போனில் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

டிஜிட்டல் கைது
டிஜிட்டல் கைது

இணையதள குற்றவாளிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் என்று நடிகர் அமிதாப் பச்சன் கூறுவது போன்ற அந்த வாய்ஸ் மெசேஜ் போனில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது.

ஒருவருக்கு போன் செய்தால் முதலில் ஒலிப்பது அமிதாப் பச்சனின் வாய்ஸ் மெசேஜ்தான். அதன் பிறகுதான் காலுக்கு ரிங் போகும்.

சில நேரங்களில் அவசரமாக ஒருவருக்கு போன் பண்ண நினைக்கும்போது அமிதாப் பச்சனின் வாய்ஸ் மெசேஜ் வரும். இது தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. நடிகர் அமிதாப்பச்சனின் சமூக வலைத்தளப் பக்கத்திலும் இது தொடர்பாக நெட்டிசன்கள் அவரைக் கடுமையாக ட்ரோல் செய்தனர்.

ஒருவர் போன் வாய்ஸ் மெசேஜை நிறுத்துங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு அமிதாப் பச்சன், "அரசாங்கத்திடம் சொல்லுங்கள். அவர்கள் சொல்வதைத்தான் நான் செய்தேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

இதே போன்று மற்றொரு நெட்டிசன் அமிதாப் பச்சனின் வயதைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள அமிதாப் பச்சன், "உங்களுக்கும் முதுமை வரலாம். ஆனால் வயதானவர்கள் புத்திசாலி என்று ஒரு பழமொழி உண்டு" என்று குறிப்பிட்டு இருந்தார்.

பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து அமிதாப் பச்சனின் வாய்ஸ் மெசேஜை மத்திய அரசு இன்றுமுதல் அகற்றிவிட்டது. இதற்கு முன்பும் கொரோனா காலத்தில் அமிதாப் பச்சனின் வாய்ஸ் மெசேஜ் போனில் வந்தபோது அதற்குக் கடும் விமர்சனம் வந்தது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Amir khan: "60 வயதிலும் ஓர் இணையைக் கண்டடைய உதவியது இதுதான்" - மனம் திறந்த ஆமிர் கான்

கடந்த மார்ச் மாதம் நடந்த பிறந்தநாள் விழாவின்போது, தனது கேர்ள் ஃபிரண்டை உலகுக்கு அறிமுகப்படுத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் ஆமிர் கான்.60 வயதிலும் ஒரு காதலைக் கண்டடைய தனது மனநல சிகிச்சைகள் ... மேலும் பார்க்க

ஷாருக் கானின் மன்னத் பங்களா புனரமைப்பில் விதி மீறலா? - வனத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு!

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மும்பை பாந்த்ராவில் உள்ள மன்னத் பங்களாவில் வசித்து வருகிறார். இப்பங்களா மிகவும் பழமையானது ஆகும். எனவே எந்த பணிகள் மேற்கொள்வதாக இருந்தாலும் மாநகராட்சியிடம் ஒப்புதல் பெறவேண்ட... மேலும் பார்க்க

Sitaare Zameen Par Review: உள்ளத்தைத் தொடும் கவிதை; நெகிழ வைக்கும் ஃபீல் குட் டிராமா!

கூடைப்பந்து பயிற்சியாளரான குல்ஷனுக்கு (ஆமிர் கான்) முன்கோபமும் ஈகோவும் அடிக்கடி எட்டிப்பார்க்கும் மனோபாவம். ஒரு பிரச்னையில் தன்னுடைய சீனியர் கோச்சை அவர் அடித்துவிட, கூடவே அன்று இரவே குடித்துவிட்டு ஒரு... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள The Hunt - The Rajiv Gandhi Assassination Case (வேட்டை - ராஜீவ்காந்தி கொலை வழக்கு) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக... மேலும் பார்க்க

Sitaare Zameen Par: குரோசவா இன்பிரேஷன்;ஆமீர் கான் இயக்குநரான கதை! - 'தாரே ஜமீன் பர்' ரீவிசிட்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ஆமீர் கானின் 'சித்தாரே ஜமீன் பர்'. 2007-ல் ஆமீர் கானின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான 'தாரே ஜமீன் பர்' திரைப்படத்திற... மேலும் பார்க்க