செய்திகள் :

ஆனி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்!

post image

ஆனி மாதத்தில் சுபமுகூர்த்த தினத்தன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்று பத்திரப் பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாள்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் மக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தற்போது ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 27.06.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

எனவே, 27.06.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள், கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Summary

TN Registration department announced that Additional tokens will be issued in all Registrars offices in aani month muhoortham day

நடிகர் ஜி. சீனிவாசன் காலமானார்

நடிகர் ஜி. சீனிவாசன் உடல்நலக் குறைவால் இன்று மதியம் காலமானார்.இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்கொண்ட ஜி. சீனிவாசன் (95) உடல்நலக் குறைவு காரணமாக சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கில் கிருஷ்ணா சிக்கியது எப்படி? - காவல் துறை விளக்கம்

கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸார் கடந்த திங்கள்கிழமை கைது செய்த நிலையில், இன்று(ஜூன் 26) நடிகர் கிருஷ்ணாவை சென்னை காவல்துறையினர் கைது செய்துனர்.இது குறித்து... மேலும் பார்க்க

பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க ஸ்டாலினுக்கு அவசியம் இல்லை! - இபிஎஸ்

முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை திர... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகைக்கு யுபிஎஸ்சி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து ஊக்கத்தொகை பெற மதிப்பீட்டுத் தேர்வுக்கு யுபிஎஸ்சி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்!

வால்பாறையில் பெய்துவரும் கனமழையால் கருமலை இரைச்சல்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில... மேலும் பார்க்க

தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் இறைச்சி விற்பனை! - அரசு தகவல்

தமிழகம் முழுவதும் இனி ஒரே விலையில் இறைச்சி விற்கப்படும் என்றும் அதற்கான விலையை அரசே நிர்ணயிக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை வேப்பேரியில் தேசிய அளவிலான கால்நடை கருத்தரங்கு நடைபெற்று வர... மேலும் பார்க்க