செய்திகள் :

மேற்கு வங்கம்: மீண்டும் ஒரு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை?

post image

மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு கொல்கத்தாவில் காஸ்பா பகுதியில் மாநில அரசு நடத்தும் சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவரை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு தொடர்பாக படிவங்களைச் சமர்ப்பிக்க, புதன்கிழமையில் கல்லூரி வந்த 24 வயதான மாணவியை, அதே கல்லூரியில் படிக்கும் 2 மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவரும் சேர்ந்து கல்லூரி பாதுகாப்பு காவலரின் அறைக்குள் மாணவியை அடைத்து, இரவு 7.30 முதல் 10.50 மணியளவில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து, கஸ்பா காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், ஜயிப் அகமது (19), பிரமித் முகர்ஜி (20) மற்றும் முன்னாள் மாணவரும் கல்லூரியில் திரிணமூல் காங்கிரஸின் மாணவர் பிரிவின் முன்னாள் தலைவருமான மோனோஜித் மிஸ்ரா (31) ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் அலிபூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய காவல்துறையினர், 14 நாள்கள் காவலில் வைக்கக்கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், அடுத்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) வரை மட்டுமே காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதத்தில் ஆர்ஜி மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்கம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர் விபரீதம்!

ஹைதராபாதில் மகள்களின் கல்விச் செலவுக்காக ஆபாசப் படத்தில் நடித்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் ஆம்பர்பேட்டில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது மனைவியுடன் சேர்ந்து மொபைல் செய... மேலும் பார்க்க

ஹிமாசலில் திடீர் வெள்ளம்: இதுவரை 5 சடலங்கள் மீட்பு

ஹிமாசலில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹமாசலில் காங்க்ரா மற்றும் குலு மாவட்டங்களில் புதன்கிழமை மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இ... மேலும் பார்க்க

அரசியலமைப்பை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்: ராகுலுக்கு ஜெய்சங்கர் அறிவுரை!

அரசியலமைப்பு புத்தகத்தைக் கையில் எடுப்பதில் எந்தப் பயனுமில்லை. அதனை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக விமர்சித்த... மேலும் பார்க்க

நொய்டாவில் சட்டவிரோத முதியோர் இல்லத்தில் இருந்து 42 முதியவர்கள் மீட்பு

நொய்டாவில் சட்டவிரோத முதியோர் இல்லத்தில் இருந்து 42 முதியவர்கள் மீட்கப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 55, சி-5 இல் உள்ள ஆனந்த் நிகேதன் விருதா சேவா ஆசிரமத்தின் முதியோர் இல்லத... மேலும் பார்க்க

அதிகளவில் நீர்ப் பயன்பாடு! விவசாயத்துக்கும் வரி விதிக்கும் மத்திய அரசு?

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க, விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ஓர் கூமாபட்டி..! திடீர் இன்ஸ்டாகிராம் வைரலால் திக்குமுக்காடிய மலைக் கோட்டை!

மகாராஷ்டிரத்தின் மலை உச்சியில் உள்ள கோட்டைக்கு ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத அளவில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திடீர், திடீரென இணையத்தில் வைரலாகும் இடங்கள... மேலும் பார்க்க