Love Marriage Review: காமெடிக்கேற்ற களம், குடும்பங்களின் சங்கமம் - ஈர்க்கிறதா இந...
தொடர்ந்து 4வது நாளாக உயர்ந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 4-வது அமர்வாக பெஞ்ச்மார்க் குறியீடுகள் உயர்நது முடிவடைந்தன.
டிரம்ப் கட்டண காலக்கெடு நீட்டிக்கப்படும் என்ற நம்பிக்கையாலும், விரைவில் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புக்கான சாத்தியக்கூறுகளாலும் நிஃப்டி 50 குறியீடு 25,650 புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டியது.
மற்றொரு சாதனையாக நிஃப்டி வங்கி குறியீடு 57,400 புள்ளிகள் என்ற உச்சத்தை கடந்து முடிந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 333.48 புள்ளிகள் உயர்ந்து 84,089.35 ஆக இருந்தது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 303.03 புள்ளிகள் உயர்ந்து 84,058.90 புள்ளிகளாகவும், நிஃப்டி 88.80 புள்ளிகள் உயர்ந்து 25,637.80 ஆக நிலைபெற்றது.
மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் குறியீடு 0.4 சதவிகிதமும் ஸ்மால்கேப் குறியீடு 0.5 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தன.
சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், பவர் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் யூனிலீவர், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சன் பார்மா ஆகியவை உயர்ந்த நிலையில் டிரென்ட், எடர்னல், ஆக்சிஸ் வங்கி மற்றும் டைட்டன் ஆகியவை சரிந்த முடிந்தன.
நிஃப்டி-யில் ஜியோ ஃபைனான்சியல், இண்டஸ்இண்ட் வங்கி, அதானி எண்டர்பிரைசஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், அப்பல்லோ மருத்துவமனைகள் ஆகியவை உயர்ந்த அதே நேரத்தில் டிரென்ட், டாக்டர் ரெட்டி லேப்ஸ், எடர்னல், விப்ரோ, டாடா கன்ஸ்யூமர் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
நுகர்வோர் சாதனங்கள், ஐடி மற்றும் ரியல் எஸ்டேட் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன. மூலதன பொருட்கள், சுகாதாரம், எண்ணெய் & எரிவாயு, மின்சாரம், தொலைத்தொடர்பு, பொதுத்துறை வங்கி ஆகியவை 0.5 முதல் 1 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தன.
ஜேபி மோர்கன் மேம்படுத்தியதையடுத்து டோரண்ட் பார்மா பங்குகள் 4% உயர்ந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.12,594.38 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஜேஎஸ்டபிள்யூ பெயிண்ட்ஸ் ரூ.8,986 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்குவதாக கூறியதையடுத்து அக்ஸோ நோபல் இந்தியாவின் பங்குகள் 6% உயர்ந்தன.
ஜியோ பிளாக்ராக் புரோக்கிங்கை பங்கு தரகராக செயல்பட செபி அனுமதித்ததையடுத்து, ஜியோ ஃபைனான்சியல் பங்குகள் 4% உயர்ந்த நிலையில் சிஎல்எஸ்ஏ சிறப்பாகச் செயல்படுவதால் எஸ்பிஐ பங்குகள் 1% உயர்ந்தன.
காட்ஃப்ரே பிலிப்ஸ், நவின் ஃப்ளூரின், நுவாமா வெல்த், அபோட் இந்தியா, சோலார் இண்டஸ்ட்ரீஸ், இன்டர்குளோப் ஏவியேஷன், லாரஸ் லேப்ஸ், மேக்ஸ் ஹெல்த்கேர், டால்மியா பாரத், டிவிஎஸ் மோட்டார், எச்டிஎஃப்சி லைஃப், எம்சிஎக்ஸ் இந்தியா, பாரதி ஏர்டெல், ஜில்லெட் இந்தியா, ஹூண்டாய் மோட்டார், மேக்ஸ் பைனான்சியல், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், லாயிட்ஸ் மெட்டல்ஸ் உள்ளிட்ட 130க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை பதிவு செய்தன.
ஆசிய சந்தைகளில், ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு உயர்ந்து நிலைபெற்றது, அதே நேரத்தில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் பிற்பகல் வர்த்தகத்தில் உயர்ந்த வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) உயர்ந்து முடிந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.72 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 68.20 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
இதையும் படிக்க: