செய்திகள் :

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் 2.84% பங்குகளை விற்பனை செய்த டபிள்யூ.எஃப்.எம். ஆசியா!

post image

புதுதில்லி: ஹாங்காங்கை தளமாகக் கொண்ட டபிள்யூ.எஃப்.எம். ஆசியா நிறுவனமானது, ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 2.84 சதவிகித பங்குகளை கிட்டத்தட்ட ரூ.701 கோடிக்கு திறந்த சந்தை மூலம் பரிவர்த்தனை செய்ததாக இன்று தெரிவித்துள்ளது.

டபிள்யூ.எஃப்.எம். ஆசியா, அதன் துணை நிறுவனமான டபிள்யூ.எஃப் மூலம், நிஃப்டி-யில் 1.66 கோடிக்கும் அதிகமான பங்குகளை அதாவது 2.84 சதவிகித பங்குகளை விற்பனை செய்துள்ளது.

பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.420.03 என்ற விலையில் கைமாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதன் ஒப்பந்த மதிப்பு ரூ.700.86 கோடியாக உள்ளது.

மார்ச் காலாண்டின் இறுதியில், டபிள்யூ.எஃப்.எம். ஆசியா, சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 3.48 சதவிகித பங்குகளை வைத்திருந்தது.

இதற்கிடையில், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் 2.8 சதவிகித பங்குகளை கிட்டத்தட்ட ரூ.690 கோடிக்கு, 1.64 கோடிக்கும் அதிகமான பங்குகளை வாங்கியுள்ளது.

என்எஸ்இ-யில் ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ரூ.428.20 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: உலகளாவிய ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வுடன் முடிவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.86.07 ஆக முடிவு!

மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலர் குறியீட்டில் ஏற்பட்ட மீட்சி காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.86.07 ஆக முடிவடைந்தது.... மேலும் பார்க்க

உலகளாவிய ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வுடன் முடிவு!

மும்பை: ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதட்டங்கள் தணிவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில், உலக சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றைய வர்... மேலும் பார்க்க

ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் பட்ஸ் இசட் 3! இந்தியாவில் அறிமுகம்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய இயர்போனான, புல்லட் வயர்லெஸ் பட்ஸ் இசட் 3 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. கழுத்தில் மாட்டிக்கொண்டு பாடல் கேட்கும் இயர்போன்களுக்கு இந்திய பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உ... மேலும் பார்க்க

பிரிட்டனில் சுசூகி இ-விட்டாரா அறிமுகம்! இந்தியாவில் எப்போது?

மாருதி சுசூகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாராவை பிரிட்டனில் அறிமுகம் செய்துள்ளது.இரண்டு பேட்டரி விருப்பங்கள், 10 கலர் தேர்வுகள் என பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவின் இந்தாண்டு இறுதிக்கு... மேலும் பார்க்க

இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும்! அறிமுகமானது போக்கோ எஃப் 7

இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள எஃப் 7 என்ற புதிய ஸ்மார்ட்போனை போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஷாவ்மி நிறுவனத்தின் மற்றொரு கிளை நிறுவனமான போக்கோ, இ... மேலும் பார்க்க

ஈரான்-இஸ்ரேல் போர் நிறுத்தம் எதிரொலி: தங்கம் விலை ரூ.900 சரிவு!

புதுதில்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், பாதுகாப்பான புகலிடமான தங்கத்தின் விலை இன்று தலைநகர் தில்லியில் ரூ.900 சரிந்து ரூ.98,900 ஆக நி... மேலும் பார்க்க