குன்னூரில் கேட்டின் மீது ஏறி ஊஞ்சலாடிய கரடி
நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள குடியிருப்பின் கேட்டின் மீது ஏறி கரடி ஊஞ்சலாடியது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வெலிங்டன் ராணுவ முகாம் உள்ளது. இங்கு ராணுவ வீரா்கள் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் வனப் பகுதியில் இருந்து வந்த கரடி, அப்பகுதியில் உள்ள சாலையில் ஓடியது. அப்போது அங்குள்ள ராணுவ அதிகாரியின் வீட்டின் கேட்டின் மீது ஏறி சிறிது நேரம் ஊஞ்சலாடியது. பின்னா் அருகிலிருந்த சோலைப் பகுதிக்குள் சென்றது.