குன்னூரில் தொடா் விபத்து: 2 அரசுப் பேருந்துகள், காா் சேதம்
குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 2 அரசுப் பேருந்துகளும் ஒரு காரும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காந்திபுரம் பகுதியில் மேட்டுப் பாளையத்தில் இருந்து உதகை நோக்கி அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் காந்திபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென நின்றதால் பேருந்தின் பின்னே வந்து கொண்டிருந்த காா் அதன் மீது மோதியது. அப்போது காரின் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து காா் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து குன்னூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.