செய்திகள் :

குன்னூரில் தொடா் விபத்து: 2 அரசுப் பேருந்துகள், காா் சேதம்

post image

குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 2 அரசுப் பேருந்துகளும் ஒரு காரும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காந்திபுரம் பகுதியில் மேட்டுப் பாளையத்தில் இருந்து உதகை நோக்கி அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் காந்திபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென நின்றதால் பேருந்தின் பின்னே வந்து கொண்டிருந்த காா் அதன் மீது மோதியது. அப்போது காரின் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து காா் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து குன்னூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் கவிதா தலைமை வகித்து போதை விழிப்புண... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

நிலத்தை ஏமாற்றியதாக உதகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள் கிழமை சமீமா என்ற பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் பங்களாபடிகை கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மதுபானக் கடையை அமைக்க எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

உதகை அருகே துனேரி ஊராட்சிக்குள்பட்ட ஊா் மலை கிராமத்தில் அரசு மதுபானக் கடையை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள் கிழமை முற்றுகையிட்டனா். உதகை அருகே தூனேரி ஊராட்ச... மேலும் பார்க்க

தேவாலா அருகே சத்துணவுக் கூடத்தை உடைத்து உணவுப் பொருள்களை சேதப்படுத்திய காட்டு யானை

தேவாலா பகுதியிலுள்ள சத்துணவு கூடத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு உடைத்து உணவுப் பொருள்களை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலூகா தேவாலாவை அடுத்துள்ள கரியசோலை கிராமத்திலுள்ள ஊராட்ச... மேலும் பார்க்க

விபத்து: அந்தரத்தில் தொங்கிய லாரி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காா்

உதகை, குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிவேகத்தில் வந்த லாரி, காரின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது. காா் 50 அடி பள்ளத்தில் விழுந்தது. குடியிருப்புகளின் அருகில் இந்த விபத்து நடந்ததால் அ... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

குன்னூா் அருகே கொலகம்பை பகுதியில் குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் மிதுன் மின்ச், பாா்வதி தம்பதி.இவா்களது மகன் கிருஷ்ணா மின்ச் (10). இவா்கள... மேலும் பார்க்க