தேவாலா அருகே சத்துணவுக் கூடத்தை உடைத்து உணவுப் பொருள்களை சேதப்படுத்திய காட்டு யானை
தேவாலா பகுதியிலுள்ள சத்துணவு கூடத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு உடைத்து உணவுப் பொருள்களை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலூகா தேவாலாவை அடுத்துள்ள கரியசோலை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சத்துணவுக் கூடத்தை நள்ளிரவில் உடைத்த காட்டு யானை, அங்கிருந்த அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றுவிட்டு மூட்டைகளை வீசியெறிந்துவிட்டுச் சென்றுள்ளது.
இது குறித்து தகவலறிந்த வனத் துறையினா் அந்த யானையை காடடுக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனா்.