செய்திகள் :

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை விண்வெளிக்குப் பயணம்!

post image

இந்திய வீரர் உள்பட 4 பேர் கொண்ட குழு நாளை(ஜூன் 25) விண்வெளிக்கு செல்ல உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா உள்பட நான்கு பேர் குழு, நாளை(ஜூன் 25) விண்வெளிக்கு செல்ல உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. சுபான்ஷு சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோா் கபு ஆகியோரும் விண்வெளிக்குச் செல்கின்றனர்.

முன்னதாக, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் மூலம், அவர்கள் பயணிக்க இருந்தனர்.

திட்டமிடப்பட்ட ஏவுகணை பாதையில் நிலவிய மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு, பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷியப் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் ஏவுகலன் ஏவுதல் 5 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜூன் 19-ஆம் தேதி அந்தப் பயணம் திட்டமிடப்பட்ட நிலையில், 5-வது முறையாகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இவர் செல்லும் விண்கலம் நாளை அதிகாலை 2:31 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 12:10 மணிக்கு) ஏவப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க...இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த எதிரொலி! கச்சா எண்ணெய் அதிரடி சரிவு!

ஈரான் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேல் வான்வழித் தடம் மூடல்!

இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருவதால் அந்நாட்டின் வான்வழிப் பாதை முழுவதுமாக மூடப்பட்டு அனைத்து வகையான பயணிகள் விமானங்களின் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஈ... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அமல்; தயவு செய்து மீறாதீர்கள்! - டிரம்ப் எச்சரிக்கை!

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவுசெய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர... மேலும் பார்க்க

போர் நிறுத்தமா..? இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்!

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் பல்வேறு பகுதிகளில் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரான... மேலும் பார்க்க

ஈரான் தாக்குதல் எதிரொலி: வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து!

ஈரான் தாக்குதல் எதிரொலியால் வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று அணு ஆயுத தளவாடங்... மேலும் பார்க்க

இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? டிரம்ப்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல் மீதான போர் நிறுத்தம் குறித்த அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பானது, அடுத்த 24 மணிநேரத்தில் வெளியாகும் என்று அமெரிக்க அதிபர் ட... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த எதிரொலி! கச்சா எண்ணெய் அதிரடி சரிவு!

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த முடிவு வெளியானதையடுத்து, கச்சா எண்ணெய் விலை சரிந்தது.இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இந்த நிலையில... மேலும் பார்க்க