செய்திகள் :

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!

post image

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிதீர்க்க, மே 7 ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, இந்திய ராணுவம் நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலால் உச்சகட்ட பதற்றம் நிலவியது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

எனினும் இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடையை மத்திய அரசு விதித்தது. சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) விதிகளின்படி, ஒரு நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்தக் கூடாது என பிற நாடுகளுக்கு ஒரு மாதம் மட்டுமே தடை விதிக்க முடியும்.

அதன் பிறகு தடையைத் தொடர வேண்டுமானால், அதனை மேலும் நீட்டித்து புதிய உத்தரவை வெளியிட வேண்டும்.

அதன்படி, ஜூன் 24 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவின் வான் எல்லையை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த முடியாத வகையில் மேலும் மாதத்திற்கு ஜூலை 24 ஆம் தேதி வரை தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை விண்வெளிக்குப் பயணம்!

கேமரூனுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா! மீண்டும் 1000 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைப்பு!

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், இந்தியா சார்பில் 1000 மெட்ரிக் டன் அரிசி மற்றும் மருத்துவப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேமரூன் நாட்... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானங்களுக்கு தற்காலிக தடை கோரி வழக்கு!

பாதுகாப்பு தணிக்கைகள் முடியும்வரை ஏர் இந்தியா போயிங் விமானங்களுக்கு தற்காலிக தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிக... மேலும் பார்க்க

ஆற்றில் சிக்கிய படகு வீடு! மீட்புப் பணியில் தேசிய படை!

மகாராஷ்டிர மாநிலத்தில், தொழில்நுட்பக் கோளாரால் ஆற்றின் நடுவே சிக்கிய படகு வீட்டிலுள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். பால்கர் மாவட்டத்தின், மஸ்வான் பகுதியிலுள்ள சூர்யா ஆற்றி... மேலும் பார்க்க

கனமழையால் நிலச்சரிவு! 2 மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை முடக்கம்! எங்கே?

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இருமாநிலங்களையும் இணைக்கும் 10-வது தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கட... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவில் 2 பேர் பலி! 2வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

உத்தரகண்ட் மாநிலத்தின் யமுனோத்ரி பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில் மேலும் இருவரைத் தேடும் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன. உத்தரகாசி மாவட்டத்தில், யமுனோத்ரி மலைப்பாதையில், கைஞ்... மேலும் பார்க்க

விமான விபத்து: 256 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 256 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களு... மேலும் பார்க்க