செய்திகள் :

உத்தரகண்ட் நிலச்சரிவில் 2 பேர் பலி! 2வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

post image

உத்தரகண்ட் மாநிலத்தின் யமுனோத்ரி பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில் மேலும் இருவரைத் தேடும் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன.

உத்தரகாசி மாவட்டத்தில், யமுனோத்ரி மலைப்பாதையில், கைஞ்சி பைரவர் கோயில் அருகில் நேற்று (ஜூன் 23) நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், யமுனோத்ரி கோயிலுக்குச் சென்று திரும்பிய 5 பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு உடனடியாக விரைந்த மீட்புப் படையினர், படுகாயமடைந்த மும்பையைச் சேர்ந்த ராசிக் என்பவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில், நிலச்சரிவில் சிக்கி பலியான இருவரது உடல்கள் சிதைந்த நிலையில், ஜூன் 23 ஆம் தேதி இரவு கண்டுபிடிக்கப்பட்டன.

அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் இருவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிசங்கர் (வயது 47) மற்றும் அவரது மகள் கியாத்தி (8) என்பது தெரியவந்தது.

இந்நிலையில், நிலச்சரிவில் மாயமான தில்லியைச் சேர்ந்த பவிகா (11) மற்றும் மும்பையைச் சேர்ந்த கம்லேஷ் ஹெத்வா (35) ஆகியோரைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: விமான விபத்து: 256 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

அரபு நாட்டிலிருந்து ஒரு கோடி வழங்கிய மருத்துவர்: ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் திர்ஹாம்(இந்திய ரூபாயில் சுமார் 1 கோடி) நிதியுதவி வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மர... மேலும் பார்க்க

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியக் கொள்கை; உலகிற்கு எடுத்துரைத்த ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர்

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கடுமையான கொள்கையை ஆபரேஷன் சிந்தூர் உலகிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதர் மோடி கலந்... மேலும் பார்க்க

கேதாரேஷ்வர் குகைக் கோயில் தூண்கள் பற்றிய மர்மம் உண்மையா? உலக அழிவை சொல்லுமா?

மகாராஷ்டிரத்தில் அமைந்துள்ள கேதாரேஷ்வர் குகைக் கோயிலைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். சஹ்யாத்ரி மலையின் இதயப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நீடிப்பதாகத் த... மேலும் பார்க்க

கேமரூனுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா! மீண்டும் 1000 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைப்பு!

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், இந்தியா சார்பில் 1000 மெட்ரிக் டன் அரிசி மற்றும் மருத்துவப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேமரூன் நாட்... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானங்களுக்கு தற்காலிக தடை கோரி வழக்கு!

பாதுகாப்பு தணிக்கைகள் முடியும்வரை ஏர் இந்தியா போயிங் விமானங்களுக்கு தற்காலிக தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிக... மேலும் பார்க்க

ஆற்றில் சிக்கிய படகு வீடு! மீட்புப் பணியில் தேசிய படை!

மகாராஷ்டிர மாநிலத்தில், தொழில்நுட்பக் கோளாரால் ஆற்றின் நடுவே சிக்கிய படகு வீட்டிலுள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். பால்கர் மாவட்டத்தின், மஸ்வான் பகுதியிலுள்ள சூர்யா ஆற்றி... மேலும் பார்க்க