செய்திகள் :

அரபு நாட்டிலிருந்து ஒரு கோடி வழங்கிய மருத்துவர்: ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

post image

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் திர்ஹாம்(இந்திய ரூபாயில் சுமார் 1 கோடி) நிதியுதவி வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்.

கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஏர் இந்தியாவின் ஏஐ-171 விமானம் ஒன்று அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமான நிலையம் அருகேயிருக்கும் பி.ஜே. மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள ’அதுல்யம் விடுதி’ கட்டடத்தின் மீது விழுந்து தீப்பிடித்ததில் விமானத்திலிருந்த 241 பயணிகள் உள்பட அந்த கட்டடத்திலிருந்த மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், அவர்தம் குடும்பத்தினர் உள்பட மொத்தம் 271 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

இந்தநிலையில், விமான விபத்தில் உயிரிழந்த 4 மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கும் 5 லட்சம் திர்ஹாம் நிதியுதவி வழங்கியுள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவம் சார்ந்த துறையில் தொழில் முனைவோராக உள்ள டாக்டர் ஷம்ஷீர் வாயாலீல்.

விபத்துக்குப்பின் மருத்துவக் கல்லூரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றிலிருந்து மீண்டும் வகுப்புகள் ஆரம்பமாகின. இந்தநிலையில், டாக்டர் ஷம்ஷீர் வாயாலீல் வழங்கிய நிதியுதவி பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டது.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்கள் மட்டுமில்லாது, இந்த விபத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் 3 மருத்துவர்களுக்கும் அவர்களை விட்டுப் பிரிந்த ஒரு குடும்ப உறுப்பினருக்கு தலா 1 லட்சத்து 5 ஆயிரம் திர்ஹாம் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் தீக்காயங்களுடன் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் உள்பட 14 பேருக்கு தேவையான நிதியுதவி வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களுக்கு தலா 15,000 திர்ஹாம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் மொத்தம் 28 லட்சம் திர்ஹாம் தொகை வழங்கியுள்ளார்.

மருத்துவ வளாக விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவர் எழுதியுள்ள இரங்கல் கடிதத்தில் ‘நீங்கள் தனியாக இல்லை. உங்களுடன் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயமும் துணை நிற்கிறது” என்று குறிப்பிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சிந்து நதி சாா்ந்த திட்ட பிரச்னைகள்: பாகிஸ்தானுடனான கூட்டத்தை நிறுத்தி வைக்க உலக வங்கிக்கு இந்தியா கோரிக்கை

சிந்து நதி சாா்ந்த கிஷண்கங்கா, ராடில் நீா் மின் திட்டங்கள் தொடா்பான பிரச்னைகள் குறித்து பாகிஸ்தானுடனான கூட்டு ஆலோசனைக் கூட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உலக வங்கியை இந்தியா வலியுறுத்தியுள்ளது. ... மேலும் பார்க்க

கேரளத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கான விமான போக்குவரத்து சீரானது

வளைகுடா நாடுகளுக்கும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்குமான விமான போக்குவரத்து சீரானது. இதனால் இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரளத்தின் வி... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மொத்தம் 3,100 இந்தியர்கள் மீட்பு!

போர் நடைபெற்று வந்த ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து ஆபரேஷன் சிந்து மூலம் இதுவரை 3,170 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஈரான் நாட்டிலிருந்து இன்று (ஜூன் 24) காலை 292 இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்துவரப்ப... மேலும் பார்க்க

ஏர் இந்தியா கருப்புப் பெட்டி வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறதா?

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானத்தின் கருப்புப் பெட்டி, விசாரணைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டாது என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். விமான... மேலும் பார்க்க

“வாக்காளர்களின் ஓட்டுகள் திருடப்படுகின்றன” -ராகுல்: பின்னணியில் பாஜக?

மகாராஷ்டிரத்தில் ஓட்டுத் திருட்டு நடவடிக்கை நடைபெறுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முறைகேடுகள் பல ந... மேலும் பார்க்க

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியக் கொள்கை; உலகிற்கு எடுத்துரைத்த ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர்

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கடுமையான கொள்கையை ஆபரேஷன் சிந்தூர் உலகிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதர் மோடி கலந்... மேலும் பார்க்க