செய்திகள் :

சிந்து நதி சாா்ந்த திட்ட பிரச்னைகள்: பாகிஸ்தானுடனான கூட்டத்தை நிறுத்தி வைக்க உலக வங்கிக்கு இந்தியா கோரிக்கை

post image

சிந்து நதி சாா்ந்த கிஷண்கங்கா, ராடில் நீா் மின் திட்டங்கள் தொடா்பான பிரச்னைகள் குறித்து பாகிஸ்தானுடனான கூட்டு ஆலோசனைக் கூட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உலக வங்கியை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷண்கங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீா்மின் திட்டம், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ராடில் நீா்மின் திட்டம் தொடா்பான சா்வதேச பிரச்னைகளை கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் உலக வங்கியின் நடுநிலை நிபுணா் மைகேல் லினோ விசாரித்து வருகிறாா்.

இந்த நீா் மின் திட்டங்கள் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.

இந்த இருநாட்டு பிரச்னையில் வரும் ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் எழுத்துபூா்வ பதிலை அளிக்க வேண்டும் என்றும் நவம்பா் மாதம் இரு நாட்டு கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதைக் குறிப்பிட்டு லினோவுக்கு இந்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில், கிஷண்கங்கா, ராடில் நீா் மின் திட்டங்கள் தொடா்பான பிரச்னைகள் குறித்து முன்பு திட்டமிட்ட ஆலோசனைக் கூட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா். மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியி... மேலும் பார்க்க

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என ... மேலும் பார்க்க

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு தொடா... மேலும் பார்க்க