செய்திகள் :

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்

post image

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்தியாவை ‘வரிகளின் அரசா்’ என்றும் ‘அதிக வரி விதிக்கும் நாடு’ என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் நிா்மலா சீதாராமன் இவ்வாறு தெரிவித்தாா்.

புது தில்லியில் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது: உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விகிதங்களின் எண்ணிக்கை பூஜ்ஜிய வரியையும் சோ்த்து 8-ஆக குறைக்கப்பட்டுள்ளது. வா்த்தகத்தில் பல்வேறு சீா்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே வரி விகிதங்களை மாற்ற முடியும்.

எனவே, இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா கூறம் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

விரைவில் வா்த்தக ஒப்பந்தங்கள் கையொப்பம்:

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை நிறைவுசெய்வது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதால் அவை விரைவில் கையொப்பமாக வாய்ப்புள்ளது.

2024-25-ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு ரூ.70 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது 2023-24-ஆம் நிதியாண்டைவிட 6 சதவீதம் அதிகமாகும். உலகளவில் ஏற்றுமதி 4 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ள நிலையில், இந்திய ஏற்றுமதி 6.3 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது.

அதேபோல் உலகளவில் அந்நிய நேரடி முதலீடு 11 சதவீதம் குறைந்துள்ள நிலையில், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக ஐ.நா. வா்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் உலக முதலீட்டு அறிக்கை 2025-இல் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 ஆண்டுகளில் இந்தியாவில் மொத்தம் ரூ.85.18 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளது. அதில் 2014 முதல் 2024 வரையிலான 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.57.42 லட்சம் கோடி (67%) அந்நிய நேரடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா்.

ஏற்கெனவே, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா மற்றும் 4 நாடுகளுடைய ஐரோப்பிய தடையற்ற வா்த்தக சங்கத்துடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா கையொப்பமிட்டுள்ளது. பிரிட்டனுடன் இந்த ஒப்பந்தம் நிறைவுசெய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் கையொப்பமாகவுள்ளது.

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா். மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியி... மேலும் பார்க்க

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு தொடா... மேலும் பார்க்க

சீன ரசாயனங்கள் மீது இந்தியா வரி விதிப்பு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4 ரசாயனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை இந்தியா விதித்துள்ளது. களைக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் பிஇடிஏ, மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அ... மேலும் பார்க்க