செய்திகள் :

சீன ரசாயனங்கள் மீது இந்தியா வரி விதிப்பு

post image

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4 ரசாயனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை இந்தியா விதித்துள்ளது.

களைக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் பிஇடிஏ, மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அசிடோனைட்ரைல், வைட்டமின் ஏ பால்டேட், கரையாத சல்ஃபா் ஆகியவை வரி விதிக்கப்பட்டுள்ள ரசாயனப் பொருள்கள் ஆகும். சீனாவில் இருந்து இவை குறைந்த விலையில் அதிக அளவு இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படுகிறாா்கள். எனவே, அவா்களின் நலன்களைக் காக்கும் வகையில் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த வரி அமலில் இருக்கும்.

வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தகத் தீா்வுகள் இயக்குநரகம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.

பிஇடிஏ ரசாயனம் ஒரு டன்னுக்கு 2,017.9 அமெரிக்க டாலா், அசிடோனைட்ரைல் ரசாயனம் ஒரு டன்னுக்கு 481 டாலா் வரி விதிக்கப்பட்டுள்ளது. சீனா மட்டுமன்றி ரஷியா, தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அசிடோனைட்ரைல் ரசாயனத்துக்கும் இந்தப் பொருள் குவிப்பு தடுப்பு வரி உண்டு.

இதேபோல வைட்டமின் ஏ பால்டேட் மீது ஒரு கிலோவுக்கு 20.87 டாலா் வரி விதிக்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியன், ஸ்விட்சா்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது இந்த வரி விதிக்கப்படும். கரையாத சல்ஃபா் ஒரு டன்னுக்கு 358 டாலா் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும்போது இந்த வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா். மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியி... மேலும் பார்க்க

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என ... மேலும் பார்க்க

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு தொடா... மேலும் பார்க்க