செய்திகள் :

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

post image

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச்ஏஎல்) தலைவரும் நிர்வாக இயக்குநருமான டி.கே.சுனில் தெரிவித்தார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், நவீன தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்வதில் இழுபறி நீடித்து வருவதால் இந்த திட்டம் தற்போது வரை செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு டி.கே.சுனில் கூறியதாவது: தொழில்நுட்ப பரிமாற்றம் (டிஓடி) நடைமுறைகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஆலோசித்து வருகிறோம். இதுதொடர்பாக 80 சதவீத பேச்சுவார்த்தை நிறைவடைந்துவிட்டன. அடுத்து வர்த்தகரீதியாக இதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கவுள்ளோம்.

அடுத்த மார்ச் மாதம் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின்களை தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் இறுதிசெய்யப்படும் என நம்புகிறேன்.

ஏனெனில், எஃப்-414 ஜெட் என்ஜின்கள் தயாரிப்பு திட்டத்தின்கீழ் தொழில்நுட்ப பரிமாற்றம் மேற்கொள்வது தேஜஸ் இலகு ரக போர் விமானம் மார்க் 2 வகை மற்றும் 5-ஆம் தலைமுறை நவீன நடுத்தர போர் விமானம் (ஏஎம்சிஏ) ஆகிய திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

அதேபோல் இந்திய ராணுவத்துக்கு இலகுரக போர் ஹெலிகாப்டரான "பிரசண்ட்' ஹெலிகாப்டரை விநியோகிக்கும் ஒப்பந்தத்தை எச்ஏஎல் வெற்றிகரமாக கைப்பற்றியது. அதன்படி 2028 முதல் பிரசண்ட் ஹெலிகாப்டர்களை ராணுவத்துக்கு விநியோகிக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

இந்திய ராணுவ வரலாற்றில் மிகப்பெரும் ஒப்பந்தமாகும்' என்றார்.

180 தேஜஸ் மார்க் 1ஏ வகை போர் விமானங்கள் ரூ.1.15 லட்சம் கோடியில் எச்ஏஎல்-இடமிருந்து இந்திய விமானப் படை கொள்முதல் செய்யவுள்ளது. தேஜஸ் மார்க் 1ஏ இலகு ரக போர் விமானம் மற்றும் ஏஎம்சிஏ திட்டம் ஆகிய இரண்டும் இந்திய விமானப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

இத்துடன் 156 பிரசண்ட் ஹெலிகாப்டர்களை ரூ.62,700 கோடியில் எச்ஏஎல்-இடமிருந்து கொள்முதல் செய்யும் பணிகளை கடந்த மார்ச் பாதுகாப்பு அமைச்சகம் விரைவுப்படுத்தியது.

பிரசண்ட் ஹெலிகாப்டர் உள்நாட்டிலேயே முதல்முதலாக தயாரிக்கப்பட்டு 4,500 மீட்டர் உயரத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய திறனுடைய ஹெலிகாப்டராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா். மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியி... மேலும் பார்க்க

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என ... மேலும் பார்க்க

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு தொடா... மேலும் பார்க்க

சீன ரசாயனங்கள் மீது இந்தியா வரி விதிப்பு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4 ரசாயனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை இந்தியா விதித்துள்ளது. களைக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் பிஇடிஏ, மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அ... மேலும் பார்க்க