செய்திகள் :

ரயில் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படுகிறதா? - எப்போது, எவ்வளவு தெரியுமா?

post image

இந்தியாவின் 'பாக்கெட் ஃபிரெண்ட்லி' டிராவல் ஆப்ஷன் என்றால், அது 'ரயில்' தான்.

சாதாரண மக்கள் முதல் பணக்காரர்கள் வரை யார் வேண்டுமானாலும், அவர்களது பட்ஜெட்டிற்கு ஏற்ப எளிதாகவும், வசதியாகவும் ரயிலில் பயணம் செய்யலாம்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ரயில் டிக்கெட்டுகளின் விலை ஏற்றப்படலாம். அதற்கான அறிவிப்பு ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்தியன் ரயில்வே
இந்தியன் ரயில்வே

ரயில்வே துறையின் வருமானத்தை அதிகரிப்பதே இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம். மேலும், இந்த அறிவிப்பு மக்களுக்கு சுமையாகவும் மாறிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்களாம்.

ஜூலை 1-ம் தேதி வர உள்ள அறிவிப்பின் படி,

ஏ.சி கோச் பயணங்களுக்கு ஒவ்வொரு கி.மீக்கும் ரூ.2 விலை உயர்வு இருக்கும்.

ஏ.சி அல்லாத கோச்சுகளின் டிக்கெட்டுகளில் ஒரு கி.மீக்கு ஒரு பைசா விலை உயர்வு இருக்கும்.

புறநகர் ரயில்களின் டிக்கெட்டுகள், மாத சீசன் டிக்கெட்டுகள், செக்கண்ட் கிளாஸ் டிக்கெட்டுகளுக்கு 500 கி.மீ பயணம் வரைக்கும் விலை மாறுதல் கிடையாது.

இதன் மூலம், 2025 - 26 நிதியாண்டின் அடுத்த மூன்று காலாண்டுகளில்...

முதல் வகுப்பு ஏ.சி கோச்சுகள் மூலம் ரூ.9.6 கோடி,

இரண்டாம் வகுப்பு ஏ.சி கோச்சுகள் மூலம் ரூ.93.1 கோடி,

மூன்றாம் வகுப்பு ஏ.சி கோச்சுகள் மூலம் ரூ.533.8 கோடி,

நிர்வாக கோச் மூலம் ரூ.4.7 கோடி,

ஏ.சி சேர் கோச் மூலம் ரூ.56.4 கோடி,

ஸ்லீப்பர் கோச் மூலம் ரூ.292.3 கோடி

என்று மொத்தமாக ரூ.700 கோடி அதிக வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலூர்: சுட்டிக்காட்டிய விகடன்... பயன்பாட்டிற்கு வந்த ஒடுகத்தூர் பேருந்து நிலைய நிழற்கூடம்!

வேலூர் மாவட்டத்திலுள்ள ஒடுகத்தூர் பேரூராட்சி பகுதியானது மேல் அரசம்பட்டு, பீஞ்சமந்தை போன்ற மலை கிராமங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. இந்த ஒடுகத்தூர் பேரூராட்சி பகுதியில் இருந்து தினந்தோறும் வேலூர், சென... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்!|வைரல் வீடியோ

வந்தே பாரத் - இந்தியாவின் அதிநவீன மற்றும் மிக வேகமாக பயணிக்கும் ரயில் என்று இந்த ரயில் குறித்து மத்திய அரசு பெருமை கொள்கிறது. ஆனால், இந்த ரயில் குறித்தும், அதன் சேவைகள் குறித்தும் அவ்வப்போது புகார்கள்... மேலும் பார்க்க

பிறகு ஏன் கலாய்க்க மாட்டார்கள் ‘விளம்பர மாடல் அரசு’ என்று?

அனைவருக்கும் பசுமை வணக்கம்! மாம்பழங்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்று மாம்பழங்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்; கரும்புக்கான நிலுவைத் தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று முதல்வருக்க... மேலும் பார்க்க

கோடியூர் வாரச்சந்தை: சுகாதார சீர்கேட்டை சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கோடியூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஒவ்வொரு புதன்கிழமையும் வாரச் சந்தை நடைபெறும். இந்த பகுதி காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் நாளை வேலூர் வருகை... குழப்பியடிக்கும் பல்நோக்கு மருத்துவமனை திறப்புவிழா விவகாரம்!

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை (ஜூன் 25) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 26) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த... மேலும் பார்க்க

Israel - Iran: ``போர்நிறுத்ததை ஏற்றுக் கொள்கிறோம்; அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி, ஆனால்..'' - இஸ்ரேல்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து இருநாடுகளுக்கிடையே போர் சூழும் அபாயம் ஏ... மேலும் பார்க்க