செய்திகள் :

திண்டுக்கல்: ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தனியார் நிதி நிறுவன ஏஜென்ட்; பின்னணி என்ன?

post image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மங்கலப்பட்டி சிரங்காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 40).

இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் நத்தம் பகுதியில் உள்ள சிறுகுடி, சாணார்பட்டி, கோபால்பட்டி, உட்படப் பல கிராமங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து கூடுதலாக வட்டி வாங்கி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூல் செய்து நிதி நிறுவனத்தில் கொடுத்துள்ளார்.

Death

இந்நிலையில் பணம் கொடுத்த பொதுமக்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். நிதி நிறுவனம் பணம் தரக் கால தாமதமானதால் பணம் கொடுத்தவர்கள் பச்சையம்மாளைக் கேட்டுள்ளனர்.

நாளாக நாளாக அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பணம் கட்டியவர்களுக்குப் பணத்தைத் திருப்பி தர முடியவில்லை என்ற மன உளைச்சலில் நேற்று 24.06.25 மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த பச்சையம்மாள், தான் மறைத்துக் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.

தீ பற்ற வைத்தவுடன் தீயின் தாக்கம் தாங்க முடியாமல் அலறிக் கொண்டே ஓடி வந்ததைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக பச்சையம்மாளின் உடலில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மிகவும் ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பச்சையம்மாள் தீவிர தீக்காய சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பச்சையம்மாள்
பச்சையம்மாள்

80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் தீக்குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட பச்சையம்மாளிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதியம் மூன்று மணி அளவில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் கீதா ஜீவன் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ரூ.4 கோடி சொத்து பத்திரங்களை கோயில் உண்டியலில் போட்ட தந்தை... கொந்தளிக்கும் மகள்கள் - நடந்தது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகிலுள்ள படவேடு கோணையூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் விஜயன் (வயது 65). இவரின் மனைவி கஸ்தூரி, அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர்... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: தரக்குறைவாகப் பேசிய பள்ளி ஆசிரியர்கள்; கடிதம் எழுதி வைத்து பழங்குடி மாணவர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.இவரது மனைவி திருமணி. இவர்களது மகன், அப்பகுதியில் உள்ள அர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ”யாரைக் காப்பாற்ற சிபிஐ காலதாமதம் செய்கிறது?” - சீமான் கேள்வி

சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கு குறித்து சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.அதில், ”தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் ... மேலும் பார்க்க

முட்டையில் பெப்பர் போடாததால் ஆத்திரம்? ஊழியரைத் தாக்கிய திமுக நிர்வாகிகள்; வைரல் வீடியோவின் பின்னணி!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை-திருப்பூர் புறநகரில் ஏரிப்பாளையம் என்ற பகுதியில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது.இந்த உணவகத்துக்கு உடுமலைப்பேட்டை தி.மு.க. நகர இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் ... மேலும் பார்க்க

தென்காசி: "என் டிராக்டரை மீட்டுத் தாங்க" - ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த விவசாயி

தென்காசி மாவட்டம் குருவி குளத்தைச் சேர்ந்தவர் சுப்பையா என்பவரது மகன் யேசு ராஜன் (46). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரிடமிருந்து. இவருக்குச் சொந்தமான டிராக்டரைக் கடந்த 2024 ஆம் ஆண்டு தூத்துக்குடி ம... மேலும் பார்க்க

ஸ்ரீகாந்த் வழக்கு: கானாவிலிருந்து வந்த கொக்கைன்; காவல்துறைக்குள் பிரசாந்தின் கிரிமினல் நெட்வொரக்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் வைத்திருந்ததாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஸ்ரீகாந்த் உடன்... மேலும் பார்க்க