செய்திகள் :

இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும்! அறிமுகமானது போக்கோ எஃப் 7

post image

இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள எஃப் 7 என்ற புதிய ஸ்மார்ட்போனை போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஷாவ்மி நிறுவனத்தின் மற்றொரு கிளை நிறுவனமான போக்கோ, இந்திய பயனர்களைக் கவரும் வகையில் குறைந்த மற்றும் மத்திய தர விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

அந்தவகையில் தற்போது போக்கோ எஃப் 7 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் நேற்று முதல் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இரு வகையான நினைவக வேறுபாடுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

12GB உள் நினைவகம் + 256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.31,999.

12GB உள் நினைவகம் + 512GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 33,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போக்கோ நிறுவனக் கிளைகளில் எஃப் 7 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும். ஜூலை 1 முதல் ஃபிளிப்கார்ட் தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்கோ எஃப் 7 சிறப்பம்சங்கள்

பல முன்னணி நிறுவன ஸ்மார்ட்போனின் கலவையாக போக்கோ எஃப் 7 உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் மத்திய தர ஸ்மார்ட்போன்களில் இல்லாத வகையில் 7550mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், வழக்கமான பயன்பாட்டில் 2.18 நாள்களுக்கு ஸ்மார்ட்போனில் பேட்டரி திறன் நீடிக்கும் என போக்கோ கூறுகிறது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 90W சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

இதோடு மட்டுமின்றி 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகும் என்றும் போக்கோ குறிப்பிடுகிறது.

6.83 அங்குல அமோலிட் திரையுடன், திரையில் பயன்பாட்டை சுமூகமாக்கும் வகையில் 120Hz திறனுடன் வருகிறது. மேலும், திரை கூடுதல் பிரகாசமாக இருக்கும் வகையில் 3200nits திறன் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்நாப்டிராகன் 8எஸ் 4 ஆம் தலைமுறை புராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.

12GB உள் நினைவகம் வழங்கப்பட்டுள்ளது.

பின்பக்கத்தில் 50MP சென்சாருடன் IMX882 சோனி சென்சார், 8MP அல்ட்ரா வைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 20MP செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.86.07 ஆக முடிவு!

மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலர் குறியீட்டில் ஏற்பட்ட மீட்சி காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.86.07 ஆக முடிவடைந்தது.... மேலும் பார்க்க

உலகளாவிய ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வுடன் முடிவு!

மும்பை: ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதட்டங்கள் தணிவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில், உலக சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றைய வர்... மேலும் பார்க்க

ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் பட்ஸ் இசட் 3! இந்தியாவில் அறிமுகம்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய இயர்போனான, புல்லட் வயர்லெஸ் பட்ஸ் இசட் 3 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. கழுத்தில் மாட்டிக்கொண்டு பாடல் கேட்கும் இயர்போன்களுக்கு இந்திய பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உ... மேலும் பார்க்க

பிரிட்டனில் சுசூகி இ-விட்டாரா அறிமுகம்! இந்தியாவில் எப்போது?

மாருதி சுசூகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாராவை பிரிட்டனில் அறிமுகம் செய்துள்ளது.இரண்டு பேட்டரி விருப்பங்கள், 10 கலர் தேர்வுகள் என பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவின் இந்தாண்டு இறுதிக்கு... மேலும் பார்க்க

ஈரான்-இஸ்ரேல் போர் நிறுத்தம் எதிரொலி: தங்கம் விலை ரூ.900 சரிவு!

புதுதில்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், பாதுகாப்பான புகலிடமான தங்கத்தின் விலை இன்று தலைநகர் தில்லியில் ரூ.900 சரிந்து ரூ.98,900 ஆக நி... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.86.03 ஆக முடிவு!

மும்பை: மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவிலிருந்து மீண்டு, டாலருக்கு நிகராக 75 காசுகள் உயர்ந்து ரூ.86.03 ... மேலும் பார்க்க