செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு 3 பேர் பலி! புதியதாக 30 பாதிப்புகள் உறுதி!

post image

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 30 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் புதியதாக 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பினால் அம்மாநிலத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத் துறை இன்று (ஜூன் 25) அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாக்பூரைச் சேர்ந்த 2 பேரும், சத்தாராவைச் சேர்ந்த ஒருவரும் பலியாகியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிரத்தில் 2,425 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளதுடன், 36 பேர் பலியாகியுள்ளனர். மேலும், தலைநகர் மும்பையில் 973 பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் ஜூன் மாதம் மட்டும் அங்கு 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:2026 முதல் 10ம் வகுப்புக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்: சிபிஎஸ்இ

2026 முதல் 10ம் வகுப்புக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்: சிபிஎஸ்இ

நாடு முழுவதும்2026ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி அறிவித்துள்... மேலும் பார்க்க

அவசரநிலை 50 ஆண்டுகள் நிறைவு! மத்திய அமைச்சரவை தீர்மானம்!

அவசரநிலை பிரகடனம் செய்து 50 ஆண்டுகள் நிறைவையொட்டி, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசு, கடந்த 1975 ஆ... மேலும் பார்க்க

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை கவலைக்கிடம்!

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் முன்னாள் முத... மேலும் பார்க்க

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையைச் சுமந்து செல்கிறார் சுபான்ஷு சுக்லா!

140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள் சுமந்து செல்லும் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பல்வேறு இன்னல்களைத் தாண்டி, ஃபால்கன்-9 ரா... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவுக்கு மோடி, ராகுல் வாழ்த்து!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மனிதர்களை விண்ணுக்கு அ... மேலும் பார்க்க

இந்திய மனித விண்வெளிப் பயண சகாப்தத்தின் தொடக்கம்: விண்ணிலிருந்து சுபான்ஷு சுக்லா

இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தின் சகாப்தம் தொடங்கிவிட்டதாக டிராகன் விண்கலத்திலிருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சுபா... மேலும் பார்க்க