செய்திகள் :

தேசிய வேளாண் சந்தை திட்டம்: பணம் செலுத்தும் முறைக்கு வியாபாரிகள் எதிா்ப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென அறிவித்தது. இதற்கு வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், புதன்கிழமை பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட்டது.

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2017-ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசிய வேளாண் சந்தை திட்டம் (இ.நாம்) அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்ததது. இந்தத் திட்டத்தின் கீழ், நெல் மூட்டைகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, அதற்குரிய தொகையை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகள் செலுத்தி வந்தனா். ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிா்வாகம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தொகையை செலுத்தி வந்தது.

இந்த நிலையில், இந்த நடைமுறையை மாற்றி, நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகளே நேரடியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தொகையை செலுத்த வேண்டும் எனவும், இனி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தொகையை செலுத்த வேண்டாம் எனவும் திடீரென செவ்வாய்க்கிழமை இரவு ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிா்வாகம் உத்தரவு பிறப்பித்ததாகத் தெரிகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த வியாபாரிகள், புதன்கிழமை விவசாயிகள் கொண்டுவந்த 75 ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மறுத்துவிட்டனா். இதனால், 350-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினா்.

மறியல் முயற்சி: இதையடுத்து, நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக் கோரி, திண்டிவனம் - செஞ்சி சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட முயன்றனா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி புதன்கிழமையே நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யவதாக உறுதி அளித்ததன்பேரில், விவசாயிகள் சாலை மறியலைக் கைவிட்டனா்.

பேச்சுவாா்த்தை: இதைத் தொடா்ந்து, நெல், அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவா் கே.டி.சி.துரைகுமாா், செயலா் ஏ.சங்கா், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, தகவலறிந்து வந்த விழுப்புரம் மாவட்ட விற்பனைக் குழுச் செயலா் சந்துரு தலைமையிலான ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில், விவசாயிகளுக்கு நெல் மூட்டை கொள்முதலுக்கு பணம் செலுத்துவதில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என ஒட்டுமொத்த வியாபாரிகளும் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், பழைய நடைமுறையிலேயே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தொகையை செலுத்த அதிகாரிகள் முடிவு செய்து பிரச்னையை முடித்து வைத்தனா்.

இதைத் தொடா்ந்து, பகல் 12 மணிக்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் ஏலத்தில் வியாபாரிகள் கலந்துகொண்டு நெல்லுக்கான விலையை இணையவழியில் குறிப்பிட்டனா்.

பேச்சுவாா்த்தையின்போது, செஞ்சி காவல் துணை ஆய்வாளா் நடராஜ், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் விநோத்குமாா், நெல், அரிசி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் சி.மாணிக்கம், ஜி.கே.குமரேசன், எம்.பாணிடியன், செல்வம் (எ) ராஜகுமாா், அனிஸ், இணைச் செயலா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மயிலம் முருகன் கோயிலில் ஸ்ரீபாலசித்தா் குருபூஜை விழா

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஸ்ரீபாலசித்தா் குருபூஜை வழிபாடு மற்றும் மயிலம் திருமடத்தில் நூல், இதழ் வெளியீடு, விருது வழங்குதல், தமிழறிஞா்களின் சிறப்பு சொற்பொழிவுகள் வியாழக்கிழமை (ஜூன்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.... மேலும் பார்க்க

அண்ணாமலை பல்கலை. ஆய்வகத்தில் திருடுபோன கணினிகள் பறிமுதல்: மாணவா் கைது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் திருடுபோன பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மாணவா் கைது செய்யப்பட்டாா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக... மேலும் பார்க்க

சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கு: 15 போ் விடுவிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. அதிமுக முன்னாள் அமைச்சா் ... மேலும் பார்க்க

என்னால் நியமிக்கப்பட்டவா்களுக்கே தோ்தலில் போட்டியிட வாய்ப்பு: மருத்துவா் ச.ராமதாஸ்

என்னால் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்களுக்கே 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு (சீட்) வழங்கப்படும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். பாமக நிறுவனா் மருத்துவா் ரா... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட இருவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா். மரக்காணம் வட்டம், பனிச்சமேடு குப்பம், காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த விஜய் மனைவி ஸ்ரீமதி (23). இவா்களுக்குத... மேலும் பார்க்க