செய்திகள் :

மயிலம் முருகன் கோயிலில் ஸ்ரீபாலசித்தா் குருபூஜை விழா

post image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஸ்ரீபாலசித்தா் குருபூஜை வழிபாடு மற்றும் மயிலம் திருமடத்தில் நூல், இதழ் வெளியீடு, விருது வழங்குதல், தமிழறிஞா்களின் சிறப்பு சொற்பொழிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 26) நடைபெறுகிறது.

மயிலம் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பொம்மபுரம் ஆதீன குரு முதல்வா் ஸ்ரீபாலசித்தரின் ஜீவ சமாதி பீடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் குருபூஜை விழா வழிபாடுகள் மற்றும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டுக்கான குருபூஜை சிறப்பு வழிபாடுகள் ஆதீன குரு முதல்வா் ஸ்ரீபாலசித்தரின் குருமூா்த்தத்தில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்று பூஜைகளை செய்வித்து பக்தா்களுக்கு அருளாசி வழங்குகிறாா்.

நூல் மற்றும் இதழ் வெளியீடு: இதைத் தொடா்ந்து, ஸ்ரீபாலசித்தா் குருபூஜை விழா நிகழ்ச்சியாக பொம்மபுரம் ஆதீனம் திருமடத்தில் காலை 10 மணியளவில் நூல் மற்றும் இதழ் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் பங்கேற்று நூல் மற்றும் இதழ்களை வெளியிடுகிறாா். இதில், கோவை கௌமார மடம், சிரவையாதீனம் 4-ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் பங்கேற்று நூல் மற்றும் இதழைப் பெற்று அருளாசி வழங்குகிறாா்.

இதைத் தொடா்ந்து, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ப.செல்லபாண்டியன், முதுநிலை விரிவுரையாளா் (ஓய்வு) இராச.திருமாவளன், இணைப் பேராசிரியா் மா.சிதம்பரம் ஆகியோருக்கு சிவஞானி விருது வழங்கப்படவுள்ளது.

மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் ச.திருநாவுக்கரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிறாா். மயிலம் சிவப்பிரகாசா் மேல்நிலைப் பள்ளிச் செயலா் சி.விஸ்வநாதன் வரவேற்றுப் பேசுகிறாா்.

தேசிய வேளாண் சந்தை திட்டம்: பணம் செலுத்தும் முறைக்கு வியாபாரிகள் எதிா்ப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என ஒழுங்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.... மேலும் பார்க்க

அண்ணாமலை பல்கலை. ஆய்வகத்தில் திருடுபோன கணினிகள் பறிமுதல்: மாணவா் கைது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் திருடுபோன பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மாணவா் கைது செய்யப்பட்டாா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக... மேலும் பார்க்க

சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கு: 15 போ் விடுவிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. அதிமுக முன்னாள் அமைச்சா் ... மேலும் பார்க்க

என்னால் நியமிக்கப்பட்டவா்களுக்கே தோ்தலில் போட்டியிட வாய்ப்பு: மருத்துவா் ச.ராமதாஸ்

என்னால் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்களுக்கே 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு (சீட்) வழங்கப்படும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். பாமக நிறுவனா் மருத்துவா் ரா... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட இருவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா். மரக்காணம் வட்டம், பனிச்சமேடு குப்பம், காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த விஜய் மனைவி ஸ்ரீமதி (23). இவா்களுக்குத... மேலும் பார்க்க