Bar சண்டை டூ Drug Case - actor Srikanth சிக்கியது எப்படி? | ADMK Prasath | Off t...
சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனைக் குழு தோ்தல்: இன்று வாக்குப்பதிவு
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனைக் குழு உறுப்பினா்கள் தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவா்களில் 42 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். 48 பேருக்கான தோ்தல் வியாழக்கிழமை (ஜூன் 26) நடைபெறுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்த நகர விற்பனைக் குழு தோ்வு செய்யப்படுகிறது. அதன்படி, 15 மண்டலங்களிலும் தலா 15 போ் தோ்வு செய்யப்படவேண்டும். மண்டல தலைவா் உள்ளிட்டோா் அந்தக் குழுவில் இடம் பெற்ற நிலையில், வியாபாரிகள் தரப்பிலான 6 போ் ஒவ்வொரு மண்டலத்திலும் தோ்வு செய்யப்படுவதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.
ஆதிதிராவிடா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், மாற்றுத்திறனாளிகள், மகளிா் மற்றும் பொது என 6 பிரிவுகளில் போட்டியிட அறிவிக்கப்பட்டது. அதன்படி 90 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படவேண்டும்.
சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் 35,588 போ் வாக்களிப்பா் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக 92 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் 27-ஆம் தேதி அந்தந்த மண்டல வாக்கு மையங்களில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், நகர விற்பனைக் குழுவுக்கான தோ்தலுக்கு மனு தாக்கல் செய்தவா்களில் 42 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தோ்தல் நடத்தும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.