செய்திகள் :

ராமநாதபுரம்: வீடு புகுந்து திருட்டு; வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவிச் சென்ற திருடர்கள்

post image

ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் ஐந்தாவது தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த வாரம் கோயம்புத்தூரில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதையடுத்து தான் ஊரில் இருந்து திரும்பி வரும் வரை தனது வீட்டினை கவனித்துக்கொள்ளும்படி அருகில் வசிப்பவரிடம் கூறி சென்றுள்ளார்.

உடைந்து கிடந்த பீரோ பெட்டி

இதையடுத்து வீட்டினை தினமும் கவனித்து வந்த எதிர் வீட்டுக்காரர், நேற்று காலை ரவிச்சந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

திருட்டு கும்பல் தூவி சென்ற மிளகாய் பொடி

உடனடியாக அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்ததுடன் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி கிடந்ததை கண்டு மேலும் அதிர்ச்சியானார்.

இது குறித்து கோயம்புத்தூர் சென்றிருந்த வீட்டின் உரிமையாளர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்த எதிர் வீட்டுக்காரர், கேணிக்கரை காவல் நிலையத்திலும் புகார் செய்தார். இதனை தொடர்ந்து அங்கு வந்த கேணிக்கரை காவல் நிலைய போலீஸார், தடயவியல் நிபுணர்களை கொண்டு ஆய்வு நடத்தியதுடன் 'மிளகாய் பொடி' திருட்டு கும்பல் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடயவியல் போலீஸார் ஆய்வு

தான் நடித்த படம் ஒன்றில் திருட செல்லும் வடிவேலும் அவரது சகாக்களும் திருடிய வீட்டில் தடயங்களை மறைக்க மிளகாய் பொடியினை தூவி செல்வர். அதே போன்று ரவிச்சந்திரனின் வீட்டில் திருட வந்தவர்கள் தங்களின் தடயங்கள் தெரியாமலிருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்றிருக்கும் சம்பவம் அப்பகுதியில் வசிப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை: ''ஒழுங்கா படி” - அறிவுரை கூறிய தந்தை; ஆத்திரத்தில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த மகன்

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுக்கு ஒரு மகனும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மகன், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ... மேலும் பார்க்க

மதுபோதையில் ஆபாச நடனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் 4 பேர் மீது நடவடிக்கை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி மாதத்தில் சுமார் 20 ... மேலும் பார்க்க

திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் வீச்சு

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள காரத்தொழுவில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் முகமது குலாம் தஸ்தகீர் (46) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதன்கிழ... மேலும் பார்க்க

`இப்படியெல்லாம் நடக்குமா?' - திருமணமான ஒரே மாதத்தில் சடலமான கணவன் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

ஆந்திரா மாநிலம் கர்னூலைச் சேர்ந்த ஐஸ்வர்யா (23) என்பவருக்கும் தெலுங்கானாவின் கட்வாலிலை சேர்ந்த தேஜேஸ்வர் (26) என்பவருக்கும் மே -18 அன்று திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த திருமணத்துக்குப் பிறகு இருவ... மேலும் பார்க்க

`ஸ்பீக்கர் சத்தத்தை குறைக்க சொன்னதால் ஆத்திரம்..' - பெற்ற தாயை கொன்ற மகன்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் ரக்‌ஷனா(35). இவரது கணவர் கடந்த சில வருங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். மூத்த மகனுக்கு 17 வயதாகிறது. இரண்... மேலும் பார்க்க

ரூ.4 கோடி சொத்து பத்திரங்களை கோயில் உண்டியலில் போட்ட தந்தை... கொந்தளிக்கும் மகள்கள் - நடந்தது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகிலுள்ள படவேடு கோணையூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் விஜயன் (வயது 65). இவரின் மனைவி கஸ்தூரி, அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர்... மேலும் பார்க்க