செய்திகள் :

நெல்லை: ''ஒழுங்கா படி” - அறிவுரை கூறிய தந்தை; ஆத்திரத்தில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த மகன்

post image

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுக்கு ஒரு மகனும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மகன், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.  

அவரது மகன் சரியாகப் படிக்காமல் ஊர்சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

murder
murder

எனவே, மாரியப்பன் அடிக்கடி மகனிடம் நன்றாகப் படிக்குமாறு அறிவுறுத்திக் கண்டித்து வந்தார். மாரியப்பன் நேற்று வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டு இரவில் வீட்டுக்குத் திரும்பி வந்தார்.

அப்போது அவர் மகனிடம், ‘‘ஒழுங்காகப் படிக்கும் வேலையை மட்டும் பார், மற்றவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதை நிறுத்திவிட்டுப் படிப்பில் முழு கவனம் செலுத்து” என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.  

இதனால் தந்தை-மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட பிறகுத் தூங்கச் சென்றனர்.

மாரியப்பன் வீட்டுக்கு வெளியே வராண்டாவில் படுத்துத் தூங்கினார். வீட்டின் வெளியே ஆடுகளைக் கயிற்றில் கட்டுவதற்காக வைத்திருந்த பெரிய கல்லை எடுத்து வந்து, தூங்கிக் கொண்டிருந்த தந்தை மாரியப்பனின் தலையில் போட்டார் அவரது மகன்.  

மாரியப்பனின் வீடு உள்ள பகுதி

இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மாரியப்பனின் அலறல் சத்தம் கேட்டுக் கண்விழித்ததும் அவரது மகன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளியூர் செல்வதற்காக நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மதுபோதையில் ஆபாச நடனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் 4 பேர் மீது நடவடிக்கை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி மாதத்தில் சுமார் 20 ... மேலும் பார்க்க

திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் வீச்சு

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள காரத்தொழுவில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் முகமது குலாம் தஸ்தகீர் (46) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதன்கிழ... மேலும் பார்க்க

`இப்படியெல்லாம் நடக்குமா?' - திருமணமான ஒரே மாதத்தில் சடலமான கணவன் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

ஆந்திரா மாநிலம் கர்னூலைச் சேர்ந்த ஐஸ்வர்யா (23) என்பவருக்கும் தெலுங்கானாவின் கட்வாலிலை சேர்ந்த தேஜேஸ்வர் (26) என்பவருக்கும் மே -18 அன்று திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த திருமணத்துக்குப் பிறகு இருவ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: வீடு புகுந்து திருட்டு; வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவிச் சென்ற திருடர்கள்

ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் ஐந்தாவது தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த வாரம் கோயம்புத்தூரில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதையடுத்து தான் ஊரில் இருந்த... மேலும் பார்க்க

`ஸ்பீக்கர் சத்தத்தை குறைக்க சொன்னதால் ஆத்திரம்..' - பெற்ற தாயை கொன்ற மகன்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் ரக்‌ஷனா(35). இவரது கணவர் கடந்த சில வருங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். மூத்த மகனுக்கு 17 வயதாகிறது. இரண்... மேலும் பார்க்க

ரூ.4 கோடி சொத்து பத்திரங்களை கோயில் உண்டியலில் போட்ட தந்தை... கொந்தளிக்கும் மகள்கள் - நடந்தது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகிலுள்ள படவேடு கோணையூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் விஜயன் (வயது 65). இவரின் மனைவி கஸ்தூரி, அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர்... மேலும் பார்க்க