செய்திகள் :

ரூ.4 கோடி சொத்து பத்திரங்களை கோயில் உண்டியலில் போட்ட தந்தை... கொந்தளிக்கும் மகள்கள் - நடந்தது என்ன?

post image

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகிலுள்ள படவேடு கோணையூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் விஜயன் (வயது 65). இவரின் மனைவி கஸ்தூரி, அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர்களுக்கு மருத்துவர் சுபலட்சுமி, ராஜலட்சுமி என இரு மகள்கள். இருவருக்குமே திருமணமாகி விட்டது. இந்த நிலையில், கருத்து முரண் காரணமாக தனது மனைவி, மகள்களைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் விஜயன், சமீபத்தில் படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயிலுக்குச் சென்று, தனக்குச் சொந்தமான ரூ.4 கோடி மதிப்பிலான இரண்டு வீடுகளின் பத்திரங்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்திவிட்டு, கோயில் நிர்வாகத்தினரிடமும் தெரியப்படுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இது பற்றி, மனைவி, மகள்களுக்குத் தெரியவந்தப் பிறகு பத்திரங்களை மீட்டு வரும்படி கூறி அவர்கள் விஜயனை மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. மனைவி, மகள்களும் உறவினர்களுடன் கோயிலுக்குச் சென்றும் உண்டியலில் போடப்பட்ட பத்திரங்களை கேட்டு வாக்குவாதம் செய்திருக்கின்றனர். ஆனால், பத்திரங்களை உண்டியலில் இருந்து எடுத்துத் தர கோயில் நிர்வாகம் மறுத்துவிட்டது.

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் விஜயன்

இந்த நிலையில், கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. அதில் இருந்த பத்திரங்களையும் அறநிலையத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்கள் எனத் தெரியவந்ததும், அதிகாரிகளே ஆச்சர்யப்பட்டுப் போயினர். பத்திரத்தை செலுத்திய விஜயனை அதிகாரிகள் கோயிலுக்கு வரவழைத்தனர். இதை அறிந்த விஜயனின் மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்களும் கோயிலுக்கு விரைந்து வந்தனர். பத்திரங்களை கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். `பத்திரங்களை திரும்ப தர முடியாது’ என அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இது குறித்துப் பேசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர் விஜயன், ``என் பொண்டாட்டி 25 வருஷமா எனுக்கு சோறுப் போட்டது இல்ல. என் ரெண்டுப் பொண்ணுங்களுமே என்னை `அப்பா இல்லை’னு சொல்லிட்டாங்க. அவங்க என்னை `அப்பா’னு கூப்பிட்டதும் இல்ல. என்னை வேணாம்னு சொல்லிட்டாங்க. அவங்க அப்படி சொன்னப்பவே, நானும் சொத்துகளை கோயில்ல போட்டுடணும்னு நினைச்சிக்கட்டேன். அதன்படி, படவேடு ரேணுகாம்பாள் கோயில் உண்டியல்ல பத்திரங்களை கொண்டுவந்து போட்டுட்டேன். பத்து சென்ட் பரப்பளவுல ஒரு மாடி வீடு இருக்குது. இன்னைக்கு மதிப்புல அது மூணு கோடி ரூபாய்க்கு மேல போகும். 1,800 சதுர அடி மனையிலயும் இன்னொரு வீடு இருக்குது. அதோட மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும். ரெண்டு வீட்டோட ஒரிஜினல் பத்திரங்களையும்தான் கொண்டுவந்து போட்டுருக்கேன்.

டாக்குமென்ட் பின்னாடியே, `என் மனப்பூர்வமாகத்தான் அம்மனுக்கு என்னோட சொத்துகளை காணிக்கையாக தானமாக தருகிறேன்’ என்று எழுதி கையெழுத்துப் போட்டுருக்கேன். இது பரம்பரை சொத்து இல்ல. நானே சுயமா சம்பாதிச்சது. அம்மனுக்குத்தான் போய் சேரணும். அம்மன் அருள் எங்க தாத்தா பரம்பரையில இருக்கிற எல்லோருக்கும்போய் சேரணும். சொத்துகளை அம்மனுக்கு கொடுத்ததுல உறுதியா இருக்கிறேன்’’ என்றார்.

மகள்கள் சுபலட்சுமி, ராஜலட்சுமி

தந்தையின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய மூத்த மகள் சுபலட்சுமி , ``இது குடும்பப் பிரச்னை. நாங்க சின்ன வயசுல இருக்கிறப்ப இருந்தே அப்பா, அம்மா பிரச்னை இருக்குது. அவராகவே நாங்க செய்யுற சாப்பாடு பிடிக்கலைனு, வெளியிலதான் போய் சாப்பிடுவார். அப்பாவுக்கு ரேணுகாதேவி என்பவரோடு தவறான தொடர்பு இருக்கு. என் கல்யாணத்துக்குக்கூட அப்பா வரவே இல்ல. அதுக்கு அப்புறம் சில தினங்களிலேயே சம்பந்தமே இல்லாமல் ரேணுகாதேவி பெயர்ல சொத்துகளை எழுதினார். அப்பத்தான் ஊர்ல பேசுகிற இந்த விஷயம் உண்மைதான்போலனு எங்களுக்குமே உறுதியா தெரியவந்துச்சி. நாங்க கேட்கப் போனதுனால, மறுநாளே அந்த சொத்துகளை மறுபடியும் தன்னோட பெயர்லயே மாத்தி எழுதிக்கிட்டார்.

இப்பவுமே எங்களுக்குத் தெரியாம கோயில் உண்டியல்ல கொண்டுவந்து போட்டுவிட்டார். வீடு கட்டுறதுக்கு எங்க அம்மா லோன் போட்டு பணம் கொடுத்துருக்காங்க. எங்க சொத்து எங்களுக்கு வேணும்னு கோயில் நிர்வாகத்திடம் எழுதி கொடுத்திருக்கிறோம். சம்பந்தமே இல்லாமல் நாங்கள் அடிக்க வருவதாக பொய் சொல்லி கொண்டிருக்கிறார். வீட்டில் இருக்கிற பொருள்களையும் எடுத்துப்போட்டு தீ வைத்து எரித்துவிட்டார். திருவண்ணாமலை நீதிமன்றத்திலும் வாரிசு என்ற அடிப்படையில் வழக்கு போட்டிருக்கிறோம். எங்களுக்குத் தெரியாமல், விற்பனை செய்யவோ, வேறு யாரும் வாங்கவோ முடியாது’’ என்றார். விவகாரம் இப்படி இருக்க, சொத்துகளை நன்கொடையாளராக கோயில் பெயரில் பதிவு செய்வதற்கான நடைமுறைகளையும் அறநிலையத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இந்த நிகழ்வு பெரும் பேசுப்பொருளாகி, பரபரப்பையும் கிளப்பியிருக்கிறது.

திண்டுக்கல்: ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தனியார் நிதி நிறுவன ஏஜென்ட்; பின்னணி என்ன?

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மங்கலப்பட்டி சிரங்காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 40).இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் நத்தம் பகுதியில... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: தரக்குறைவாகப் பேசிய பள்ளி ஆசிரியர்கள்; கடிதம் எழுதி வைத்து பழங்குடி மாணவர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.இவரது மனைவி திருமணி. இவர்களது மகன், அப்பகுதியில் உள்ள அர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ”யாரைக் காப்பாற்ற சிபிஐ காலதாமதம் செய்கிறது?” - சீமான் கேள்வி

சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கு குறித்து சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.அதில், ”தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் ... மேலும் பார்க்க

முட்டையில் பெப்பர் போடாததால் ஆத்திரம்? ஊழியரைத் தாக்கிய திமுக நிர்வாகிகள்; வைரல் வீடியோவின் பின்னணி!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை-திருப்பூர் புறநகரில் ஏரிப்பாளையம் என்ற பகுதியில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது.இந்த உணவகத்துக்கு உடுமலைப்பேட்டை தி.மு.க. நகர இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் ... மேலும் பார்க்க

தென்காசி: "என் டிராக்டரை மீட்டுத் தாங்க" - ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த விவசாயி

தென்காசி மாவட்டம் குருவி குளத்தைச் சேர்ந்தவர் சுப்பையா என்பவரது மகன் யேசு ராஜன் (46). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரிடமிருந்து. இவருக்குச் சொந்தமான டிராக்டரைக் கடந்த 2024 ஆம் ஆண்டு தூத்துக்குடி ம... மேலும் பார்க்க

ஸ்ரீகாந்த் வழக்கு: கானாவிலிருந்து வந்த கொக்கைன்; காவல்துறைக்குள் பிரசாந்தின் கிரிமினல் நெட்வொரக்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் வைத்திருந்ததாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஸ்ரீகாந்த் உடன்... மேலும் பார்க்க