செய்திகள் :

ஷர்துல் தாக்குரை நீக்கிவிட்டு குல்தீப்பை தேர்வு செய்யுங்கள்: மஞ்ச்ரேக்கர்

post image

ஷர்துல் தாக்குரை நீக்கிவிட்டு குல்தீப் யாத்வை தேர்வு செய்யுங்கள் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்திய அணி முதலிரண்டு இன்னிக்ஸில் 471, 364 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 465, 373 ரன்களை எடுத்து வென்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி நாளில் 371 ரன்கள் தேவையான நிலையில் இங்கிலாந்து 82 ஓவர்களில் சேஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தனது மோசமான பந்துவீச்சினால் தோல்வியுற்றது. கேட்ச் பிடிக்க தவறியதும் இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில், முன்னாள் வீரர் சஞ்சய மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:

குல்தீப் யாதவ் கம்பேக் தர வேண்டும். இதைச் சொல்லுவதற்காக என்னை மன்னிக்க வேண்டும். ஷர்துல் தாக்குரை அணியில் இருந்து நீக்க வேண்டும். இந்த ஒரு மாற்றத்தையாவது இந்திய அணி செய்ய வேண்டும்.

நிதீஷ் ரெட்டி விஷயத்தில் அவர் ஆஸ்திரேலியாவில் செய்ததை வைத்தே அவரை தக்க வைக்க வேண்டுமென நினைக்கிறார்கள். அவர் அணியில் வந்தால் அணியின் சமநிலை குலைகிறது.

நிதீஷ் 4-ஆவது வேகப் பந்துவீச்சாளர் மாதிரி பந்துவீசுவதில்லை. அதனால், இந்தியா கடினமான முடிவை எடுத்தாக வேண்டும் என்றார்.

மே.இ.தீ. அபார பந்துவீச்சு: ஆஸி. 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸி. அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.... மேலும் பார்க்க

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஆஸி. பேட்டிங்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங்கை தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.முதல் டெ... மேலும் பார்க்க

100 கோடி பார்வையாளர்களை ஈர்த்தது எப்படி? ஜியோ ஹாட்ஸ்டார் சிஇஓ விளக்கம்!

ஐபிஎல் போட்டிகளின்போது 100 கோடி பார்வையாளர்களை ஈர்த்தது எப்படி என ஜியோ ஹாட்ஸ்டாரின் ஸ்போர்ட்ஸ் & லைவ் எக்ஸ்பிரீயன்ஸ் சிஇஓ சஞ்சோக் குப்தா பேசியுள்ளார். ஐபிஎல் 2025-இல் ஆர்சிபி அணி 18 ஆண்டுகளில் முத... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: மே.இ.தீ., ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில்... மேலும் பார்க்க

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: உச்சத்துக்கு முன்னேறிய ரிஷப் பந்த்!

இந்திய வீரர் ரிஷப் பந்த் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7-ஆவது இடத்துக்கி முன்னேறியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆண்டர்சன்... மேலும் பார்க்க

6 சதங்கள் அடித்தும் தோல்வியில் முடிந்த ரிஷப்பின் சோக வரலாறு!

இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இந்தியாவுக்கு வெளியே 6 சதங்கள் விளாசியிருந்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விள... மேலும் பார்க்க