செய்திகள் :

திருச்செந்தூர்: தரக்குறைவாகப் பேசிய பள்ளி ஆசிரியர்கள்; கடிதம் எழுதி வைத்து பழங்குடி மாணவர் தற்கொலை

post image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

இவரது மனைவி திருமணி. இவர்களது மகன், அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் கொல்லைப்புறத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப் பார்த்த உறவினர்கள் மாணவனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மாணவர் எழுதிய கடிதம்
மாணவர் எழுதிய கடிதம்

மாணவனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

மாணவனின் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில், “என் சாவுக்குக் காரணம் பள்ளி ஆசிரியைகள் வளர்மதி, பியூலா, மேரி மற்றும் தலைமை ஆசிரியை சத்யாதான்” என எழுதியிருந்தது.  

இந்தக் கடிதத்தின் அடிப்படையில் திருச்செந்தூர் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். பள்ளி மாணவனுக்குச் சாதிச்சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததாகவும், இதனால் மன உளைச்சலிலிருந்த மாணவனை ஆசிரியைகளும் அவதூறாகத் திட்டியதாகவும் தகவல்கள் பரவின.

இதனிடையே மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

அதில், ஆசிரியர்கள் அம்மாணவரைத் தரக்குறைவாகப் பேசியது தெரிய வந்தது. இதனையடுத்து தலைமை ஆசிரியை உட்பட மாணவர் கடிதத்தில் குறிப்பிட்ட 4 ஆசிரியைகளையும் பள்ளியின் மேலாளர் பிரபாகர் பணியிடை நீக்கம் செய்தார்.

இந்த நிலையில், உயிரிழந்த மாணவரின் பெற்றோர்கள், உறவினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோட்டாட்ச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
கோட்டாட்ச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

தற்கொலைக்குக் காரணமான ஆசிரியைகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாணவரின் உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ரூ.4 கோடி சொத்து பத்திரங்களை கோயில் உண்டியலில் போட்ட தந்தை... கொந்தளிக்கும் மகள்கள் - நடந்தது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகிலுள்ள படவேடு கோணையூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் விஜயன் (வயது 65). இவரின் மனைவி கஸ்தூரி, அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தனியார் நிதி நிறுவன ஏஜென்ட்; பின்னணி என்ன?

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மங்கலப்பட்டி சிரங்காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 40).இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் நத்தம் பகுதியில... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ”யாரைக் காப்பாற்ற சிபிஐ காலதாமதம் செய்கிறது?” - சீமான் கேள்வி

சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கு குறித்து சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.அதில், ”தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் ... மேலும் பார்க்க

முட்டையில் பெப்பர் போடாததால் ஆத்திரம்? ஊழியரைத் தாக்கிய திமுக நிர்வாகிகள்; வைரல் வீடியோவின் பின்னணி!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை-திருப்பூர் புறநகரில் ஏரிப்பாளையம் என்ற பகுதியில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது.இந்த உணவகத்துக்கு உடுமலைப்பேட்டை தி.மு.க. நகர இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் ... மேலும் பார்க்க

தென்காசி: "என் டிராக்டரை மீட்டுத் தாங்க" - ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த விவசாயி

தென்காசி மாவட்டம் குருவி குளத்தைச் சேர்ந்தவர் சுப்பையா என்பவரது மகன் யேசு ராஜன் (46). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரிடமிருந்து. இவருக்குச் சொந்தமான டிராக்டரைக் கடந்த 2024 ஆம் ஆண்டு தூத்துக்குடி ம... மேலும் பார்க்க

ஸ்ரீகாந்த் வழக்கு: கானாவிலிருந்து வந்த கொக்கைன்; காவல்துறைக்குள் பிரசாந்தின் கிரிமினல் நெட்வொரக்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் வைத்திருந்ததாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஸ்ரீகாந்த் உடன்... மேலும் பார்க்க