செய்திகள் :

`எங்க அண்ணனும் ராமரும் தான் ரோல் மாடல்’ - நூலகம் திறந்த‌தன் காரணம் பகிரும் மதுரை முத்து

post image

மதுரை அருகேயுள்ள தனது சொந்த கிராமத்தில் இருந்த தங்களது பூர்வீக வீட்டின் ஒரு பகுதியை இலவச நூலகமாக்கி அதைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்துள்ளார் பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் மதுரை முத்து.

கிராம மாணவர்கள் பயன்பெறும் வகையிலான நூலக ஐடியா எப்படி வந்தது என அவரையே தொடர்பு கொண்டு கேட்டோம்.

''இன்னைக்க்கு நான் உலகத்தின் பல நாடுகளூக்குப் போயிட்டு வந்துட்டேன். தமிழர்கள் இருக்கிற எல்லா இடங்கள்லயும் நல்ல வரவேற்பு கொடுத்து அன்பு காட்டுறாங்க. உலகம் முழுக்கச் சுத்தினாலும் சரி, ஷூட்டிங், நிகழ்ச்சின்னு சென்னையிலேயே கிடந்தாலும் சரி, எனக்கு அரசபட்டியில இருக்கிற ஃபீல் கிடைக்காது. அந்தளவு சொந்த ஊர்ப் ப்ரியம் நம்மை விட மாட்டேங்குது.

madurai muthu

அதனாலேயே சின்னச் சின்ன உதவிகள்னாலும் எங்க ஊரை மையப்படுத்தியே செய்துட்டு வர்றேன். சில மாசங்களுக்கு முன்னாடி ஊர்ல எங்க அப்பா அம்மா, என்னுடைய முன்னாள் மனைவிக்குக் கோயில் கட்டினப்பவே தொடர்ந்து ஊருக்கு இன்னும் சில விஷயங்களைச் செய்யலாம்னு இருக்கென்'னு அறிவிச்சிருந்தேன்.

அதோட தொடர்ச்சிதான் இந்த லைபரரி.

Madurai Muthu

எங்க ஊர் கிராமமா இருந்தாலும் இங்க இருந்து அரசு வேலைகளுக்காக முயற்சி செய்து, அதுல சேர்ந்தவங்களூம் நிறைய. என்னுடைய அண்ணனும் காவல் துறை அதிகாரியுமான பொன்.மாணிக்கவேல் நல்ல உதாரணம்.

இன்னும் உதாரணம் சொல்லணும்னா கலக்கப் போவது யாரு ராமர் எங்க மதுரை ஏரியாதான். அவர் படிச்சு கிராம நிர்வாக அதிகாரி ஆனார். இன்னைக்கும் அரசு வேலைகளுக்குத் தேர்வெழுதற ஆர்வம் எங்க ஊர்ப் பசங்க மத்தியில ரொம்பவே அதிகமா இருக்கு.

என்னையுமே எங்க அப்பா படிச்சு சர்க்கார் வேலைக்குப் போடான்னுதான் சொல்லிட்டே இருந்தார். அப்படி போகாததும் ஒருவழிக்கு நல்லதுதான். போயிருந்தா இன்னைக்கு மதுரை முத்து கிடைச்சிருக்க மாட்டான்னு நினைக்கேன்.

Kalakkapovadhu Yaaru

அதேநேரம் ஊர்ல இப்படி ஆர்வப்படுகிற பசங்களுக்கு ஏத்த வசதிகளை அவங்க குடும்பங்களால செய்து தர முடியாத சூழலும் இருக்கு. எல்லாராலயும் மதுரைக்குப் போய் படிக்க வைக்க முடியுமா? அதனாலதான் போட்டித் தேர்வுக்குத் தேவைப்படுகிற புத்தகங்கள், செய்தித்தாள்கள்னு எல்லாத்தையும் எங்க கிராமத்துலயே கிடைகிற மாதிரி செய்யலாம்னு நினைச்சேன். எல்லா நாளும் செயல்படுகிற மாதிரி எங்க குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தர் லைப்ரரியில பணியாள் போலவே இருப்பார். எந்த நேரமும் விருப்பபப்பட்ட யாரும் வந்து பயன்படுத்திக்கலாம்.

முதல் கட்டமா இப்படி சின்ன அளவுல தொடங்கியிருக்கேன். பயன்பாட்டைப் பொறுத்து இதை விரிவுபடுத்தற திட்டமும் இருக்கு'' என்கிறார் முத்து.

முத்துவின் நூலகத் திறப்பு விழாவில் ராமருடன் கலக்கப் போவது யாரு பாலாவும் கலந்து கொண்டார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

`உள்ளே போய் பார்க்கலாமா'னு கேக்க அவ்வளவு தயங்கினோம்; இன்னைக்கு... - செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகர்களை உற்சாகப்படுத்தி வருகிற செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி ஜோடி ஷூட்டிங் ஸ்பாட்டில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கேரவனை ரசித்து எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் ... மேலும் பார்க்க

Metti Oli: "`இதை ராஜம் பார்த்தாங்கன்னா என்ன சொல்லுவாங்க?'னு கமென்ட் பண்ணுவாங்க" - மெட்டி ஒலி காயத்ரி

சமீபத்தில் நடிகை காயத்ரியையும் அவரது சகோதரர் சஞ்சய் பார்கவையும்பேட்டிக்காக நம் அலுவலகத்தில் சந்தித்தோம். காயத்ரி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `இலக்கியா' தொடரில் நடித்துக் கொண்டிரு... மேலும் பார்க்க

கல்யாணம், பண மோசடி... மாறி மாறிப் புகார் - நடிகை ரெஹானா, பார் உரிமையாளர் விவகாரத்தில் நடந்தது என்ன?

சீரியல் நடிகை ரெஹானா, தன்னை ஏமாற்றி பண மோசடி செய்து விட்டதாக சென்னையைச் சேர்ந்த பார் உரிமையாளர் ராஜ் கண்ணன் என்பவர் போலீஸில் புகார் கொடுத்திருக்கும் நிலையில், ராஜ் கண்ணன் மீது ரெஹானாவும் பதில் புகார் ... மேலும் பார்க்க

Brother - Sister Exclusive : `ரஜினி சார் தான் படத்தோட கதையை சொன்னார்!' - சஞ்சய் பார்கவ் & காயத்ரி

`வள்ளி' திரைப்படத்தின் மூலம் வில்லனாக மக்களிடையே பிரபலமானவர் நடிகர் சஞ்சய் பார்கவ். இவருக்குஷில்பா, காயத்ரி என இரு சகோதரிகள். `மெட்டிஒலி' தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் ... மேலும் பார்க்க

Reehana: "திருமணம் செய்ததை மறைத்து பண மோசடி" - சீரியல் நடிகை ரிஹானா பேகம் மீது ஓட்டல் அதிபர் புகார்

பிரபல சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் தன்னை மோசடி செய்ததாக ராஜ் கண்ணன் என்பவர் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.‘ஆனந்த ராகம்’, ‘மீனாட்சி பொண்ணுங்க’ போன்ற சீரியல்களில் நடித்த... மேலும் பார்க்க