இஸ்ரேலின் உளவு அமைப்பு தலைமையகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
Reehana: "திருமணம் செய்ததை மறைத்து பண மோசடி" - சீரியல் நடிகை ரிஹானா பேகம் மீது ஓட்டல் அதிபர் புகார்
பிரபல சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் தன்னை மோசடி செய்ததாக ராஜ் கண்ணன் என்பவர் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
‘ஆனந்த ராகம்’, ‘மீனாட்சி பொண்ணுங்க’ போன்ற சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் ரிஹானா பேகம். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், சென்னை கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ராஜ் கண்ணன் (47) என்பவர் நடிகை ரிஹானா பேகம் மீது, திருமணம் செய்ததை மறைத்து பண மோசடி செய்ததாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். இந்த சம்பவம் தற்போது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
அந்தப் புகாரில், தன்னுடன் நட்பாகப் பழகி வந்த ரிஹானா பேகம் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரிடம் விவாகரத்து ஆனதாகக் கூறியதால், தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின் ரிஹானாவுக்குப் பண உதவியாக அவ்வப்போது கேட்டதால் 20 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அவரது வீட்டிற்குச் சென்ற போது கணவருடன் விவாகரத்து ஆகாமலேயே தன்னைத் திருமணம் செய்து மோசடி செய்ததாகவும் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் ராஜ் கண்ணன் புகார் அளித்திருக்கிறார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி காவல் நிலையம் இருவருக்கும் சம்மன் அனுப்பி இருக்கிறது. வரும் 18 ஆம் தேதி காவல் நிலையத்தில் நடிகை ரிஹானா மற்றும் புகார் அளித்த ராஜ் கண்ணன் ஆகியோர் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...