ஸ்மார்ட்போன்களில் இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்குமா? அறிமுகமாகிறது போக்கோ எஃப் ...
Thudarum : `அந்த திரைக்கதை என்னுடையது!' - மோகன்லால் படத்தின் மீது கதைத்திருட்டு புகார்
இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால், ஷோபனா நடிப்பில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படம் ‘துடரும்’. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

ஓடிடியில் வெளியான பிறகும் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்நிலையில் ‘துடரும்’ படத்தின் கதை 2020 ஆம் ஆண்டு தான் இயக்கியிருந்த 'தீயாட்டம்' படத்திலிருந்து திருட்டப்பட்டிருப்பதாக இயக்குநர் சனல் குமார் சசிதரன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
இதுதொடர்பாக சனல் குமார் சசிதரன் வெளியிட்டிருக்கும் பதிவில், “ நான் ‘துடரும்’ படத்தைப் பார்த்தேன். இதன் திரைக்கதை 2020-ல் நான் எழுதிய 'தீயாட்டம்' படத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ‘கொன்றால் பாவம் தின்றால் தீரும்' என எனது திரைக்கதையில் ஒரு முக்கியமான வசனம் இடம்பெற்றிருக்கும்.

அந்த வசனத்தை இப்படத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்தப் படத்தில் அந்த வசனம் முற்றிலும் தேவையற்றதாக இருந்தாலும் அதனை பயன்படுத்தி இருகின்றனர். என்னுடைய படத்தில் ஹீரோ ஆட்டோ ட்ரைவராக இருப்பார். இங்கே மோகன்லால் கார் ட்ரைவராக இருக்கிறார். விரைவில் எனது திரைக்கதையை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...