செய்திகள் :

இஸ்ரேல் - ஈரான் சண்டையால் பெட்ரோல் தட்டுப்பாடு வருமா?

post image

மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் சண்டையால், தற்போதைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்று மத்திய அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில், எரிபொருள் தேவைக்கு அதிகமாகவே இருப்பில் உள்ளதாகவும், உடனடியாக உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இல்லை எனவும் அந்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக், நாள் ஒன்றுக்கு 120 மில்லியன் பேரல்களை உற்பத்தி செய்து வருகின்றன. தற்போது, இதில் 5 மில்லியன் பேரல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 97 தற்போதும் நாள் ஒன்றுக்கு 97 மில்லியன் பேரல்கள் உற்பத்தியாகின்றன. இவை மட்டுமல்லாமல், ஏராளமான எரிபொருள் வழங்கும் நாடுகள் உள்ளன. அவை தேவைக்கு ஏற்ப எரிபொருளை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன.

இதையும் படிக்க.. 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சௌதி இளவரசர் கண் விழித்தாரா? வைரலாகும் விடியோ

அது மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு எரிபொருள் வழங்கும் பணியானது, கடல் வழியில் தடையின்றி நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கு நாள் ஒன்றுக்கு 5.6 மில்லியன் பேரல்கள் தேவைப்படும் நிலையில், தற்போது போர் நடைபெற்று வரும் பகுதி வழியாக இந்தியாவுக்கு வெறும் 1.5 முதல் 2 மில்லியன் பேரல்கள்தான் வருகின்றன.

மேலும், இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக 27 நாடுகளிலிருந்து எரிபொருள் வாங்குவதை தற்போது 40 நாடுகள் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. எனவே, நாட்டின் எரிபொருள் தேவை என்பது மிகவும் பாதுகாப்பாகவே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தலைவர் கமேனி பதுங்கியிருக்குமிடம் தெரிந்துவிட்டது: சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் - டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில் கமேனி பதுங்கியிருக்குமிடம் தங்களுக்கு தெரிய வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த... மேலும் பார்க்க

ஈரான் வான்வெளி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்..! -டிரம்ப்

ஈரான் வான்வெளி இப்போது முழுமையாக அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று(ஜூன் 17) தெரிவித்துள்ளார்.இஸ்ரேல்-ஈரான் இடையிலான தாக்குதல் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

ரஷியாவுக்கு 6,000 ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டம்!

ரஷியாவுக்கு உதவும் வகையில் 6 ஆயிரம் ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக அதிபர் கிம் ஜாங் உன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவின் பாதுகாப்பு கவுன்... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் செயலியிலும் இனிமேல் விளம்பரங்கள் வரும்! பயனர்களுக்கு இம்சையாகுமா?

வாட்ஸ்ஆப் செயலியில் முதல்முறையாக விளம்பரங்கள் வரவுள்ளன. ஆனால், இந்த விளம்பரங்களால் வழக்கமான உரையாடல்களுக்கு இடையூறு ஏதும் இருக்காது. அந்த வகையில், விளம்பரங்களுக்கான பக்கம் வாட்ஸ்ஆப்பில் வடிவமைக்கப்பட்... மேலும் பார்க்க

சீனாவில் பட்டாசு ஆலை விபத்து! 9 பேர் பலி.. 26 பேர் படுகாயம்!

சீனாவின் மத்தியப் பகுதியிலுள்ள, பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட மிகப் பெரியளவிலான வெடி விபத்தால் 9 பேர் பலியாகியுள்ளனர். ஹுனான் மாகாணத்தின், லின்லி பகுதியிலுள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில், இன்று (ஜூன் ... மேலும் பார்க்க

ஜூலை 5ஆம் தேதி காத்திருக்கும் பேரழிவு? புதிய பாபா வங்கா கணிப்பு

2025ஆம் ஆண்டில் ஜூலை 5ஆம் தேதி உலகமே பேரழிவை சந்திக்கப்போவதாக புதிய பாபா வங்கி கணித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜப்பானின் ரையோ தத்சுகி என்பவர், தற்போது புதிய பாபா வங்கா என அறியப்படுகிறார். கல... மேலும் பார்க்க