செய்திகள் :

விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்தத் தடை

post image

சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள் மற்றும் லேசர் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானம் தரையிறங்கும்போது கீழே இருந்து லேசர் ஒளியை செலுத்தினால், விமானிக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், விமான நிலையம் அருகே அதைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லேசர் மற்றும் பலூன்களை விமான நிலையம் அருகே பயன்படுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது பச்சை நிற லேசர் அடிக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், விமான நிலைய நிர்வாகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் மீது பச்சை நிற லேசர் அடிக்கப்பட்டது. பின்னர் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

ஜூன் 5ஆம் தேதி துபையில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானத்திலும் பச்சை நிற லேசர் அடிக்கப்பட்டது. இந்த ஒளி விமானியின் கண்களை கூசச் செய்வதால், வேறு வழியின்றி விமானத்தை சற்று மேலே எழுப்பி மீண்டும் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினார்.

இவ்வாறு விமானங்கள் மீது லேசர் அடிப்பது தொடர்கதையாகிவருவதால், சென்னை விமான நிலையம் அருகே லேசர் மற்றும் பலூன்களைப் பயன்படுத்த விமான நிலைய நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ரூ. 64 லட்சத்தில் திருநங்கைகளுக்கான தங்கும் இல்லங்கள்: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மற்றும் மதுரையில் ரூ. 64 லட்சத்தில் திருநங்கைகளுக்கான ‘அரண்’ எனும் தங்கும் இல்லங்களை நிறுவ தகுதியுடைய தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜக... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் ஓய்வு: பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள் ஓய்வு பெறுவது தொடா்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்வித் துறை சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்த... மேலும் பார்க்க

பவா்லிஃப்டிங்: தமிழகத்தின் முதல் பெண் நடுவா் ஆரதி அருண்

தமிழகத்திலிருந்து முதல் தேசிய மகளிா் பவா்லிஃப்டிங் நடுவராக ஆரதி அருண் அங்கீகாரம் பெற்றுள்ளாா். மாநிலத்திலிருந்து ‘கேட்டகிரி 1’ நிலையிலான ஒரே நடுவராகவும் அவா் இருக்கிறாா். அவருக்கான இந்த அங்கீகாரத்தை, ... மேலும் பார்க்க

என்சிடிஇ நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

ஒருங்கிணைந்த நான்காண்டு ஆசிரியா் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தோ்வு (என்சிடிஇ) முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் ஒருங்கிணைந்த நான்... மேலும் பார்க்க

வடகலை-தென்கலை மோதல் வேண்டாம்: உயா்நீதிமன்றம் அறிவுரை

‘வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள்’ எனத் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என இரு பிரிவினருக்கும் அறிவுரை வழங்கியது. காஞ்ச... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: ஆன்மிக பாடலை வெளியிட்டாா் நயினாா் நாகேந்திரன்

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான ஆன்மிக பாடலை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாயக்கிழமை வெளியிட்டாா். சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை ந... மேலும் பார்க்க