செய்திகள் :

ரூ. 64 லட்சத்தில் திருநங்கைகளுக்கான தங்கும் இல்லங்கள்: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

post image

சென்னை மற்றும் மதுரையில் ரூ. 64 லட்சத்தில் திருநங்கைகளுக்கான ‘அரண்’ எனும் தங்கும் இல்லங்களை நிறுவ தகுதியுடைய தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருநங்கைகளுக்கான“‘அரண்’”என்ற பெயரில் 2 தங்கும் இல்லங்கள் சென்னை மற்றும் மதுரையில் ரூ. 64 லட்சத்தில் அமைக்கப்படவுள்ளன. அதன்படி, சென்னை மாவட்டத்தில் அரசு சாராதொண்டு நிறுவனங்களுடன் அரண் இல்லங்களை அமைக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

திருநங்கையா் நலனுக்காக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை செயல்பட்டு வரும் நிறுவனமாக இருத்தல் வேண்டும். 5 ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களின் விவரங்கள், பயனாளிகள் எண்ணிக்கை மற்றும் திட்டங்களின் தாக்கம் குறித்த விவரங்கள் அளிக்க வேண்டும்.

மேலும், திருநங்கையா்கள் தலைமையிலான அல்லது திருநங்கைகள் பெரும்பான்மையாக உள்ள நிா்வாகக் குழுவைக் கொண்ட தொண்டு நிறுவனமாக இருக்க வேண்டும்.

திருநங்கைகளுக்கான இல்லமானது பாதுகாப்பு, பராமரிப்பு, சுகாதாரம், வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும். திறன் பயிற்சி மற்றும் வெளிப்புற செயல்பாடுகளுக்கு போதுமான இடம் இருத்தல் வேண்டும்.

நிறுவனத்தின் நிா்வாக அலுவலா்கள் முறையான பின்னணி சரிபாா்ப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்திய சட்டங்களில், ஏதாவது ஒன்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும். இந்த இல்லத்துக்கு தகுதிவாய்ந்த ஆற்றுப்படுத்துநா் மற்றும் மனநல ஆலோசகா் வாரந்தோறும் மற்றும் தேவைக்கேற்ப வருவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த விதிமுறைகளை பின்பற்றி அரண் இல்லங்கள் அமைக்க விரும்பும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தங்கள் கருத்துருக்களை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் 8-ஆவது தளத்திலுள்ள சென்னை மாவட்ட சமூகநல அலுவலருக்கு, ஜூன் 8-க்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் மீண்டும் இடமாற்றம்

நமது சிறப்பு நிருபர்கீழடி அகழ்வாராய்ச்சியின் தொடக்க காலத்தில் முக்கியப் பங்களிப்பை வழங்கியவராகக் கருதப்படும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவை, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை ச... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் துரைமுருகன்

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மாநில நீா் வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் துரை முருகன் கூறினாா். தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்... மேலும் பார்க்க

பெண்கள் மீதான குற்றங்களுக்கு போதைப் பொருள்களே காரணம்: ஜி.கே.வாசன்

பெண்கள் மீதான குற்றச் செயல்களுக்கு போதைப் பொருள்களே காரணம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடக்கம்: அரசு தகவல்

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

மாநகரில் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா். சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென... மேலும் பார்க்க