தெஹ்ரான்: எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்!
பெண்கள் மீதான குற்றங்களுக்கு போதைப் பொருள்களே காரணம்: ஜி.கே.வாசன்
பெண்கள் மீதான குற்றச் செயல்களுக்கு போதைப் பொருள்களே காரணம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசின் செயலற்ற ஆட்சியே காரணம். 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது கொடுமையிலும் கொடுமை. இதனால், பெண்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கு டாஸ்மாக் மற்றும் போதைப் பொருள்களே அடிப்படையாக உள்ளன. அவற்றை முழுமையாக ஒழிக்கவும், சட்டம்-ஒழுங்கை முறையாக சரியாக கடைப்பிடிக்கவும், பெண்கள் பாதுகாப்பாக இருக்கவும் அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.