வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
வந்தவாசியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வந்தவாசி பெரிய பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் மனைவி பராசக்தி(35). கடந்த ஞாயிற்றுக்கிழமை இவா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் பராசக்திக்கு தகவல் கொடுத்தனா்.
இதையடுத்து அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து பராசக்தி அளித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.