சகோதரியிடம் ரூ. 17 கோடி பண மோசடி: கைதான அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!
Plane Crash: சம்பவ இடத்தில் 800 கிராம் தங்கம், 80,000 ரூபாய் பணம், பகவத் கீதை, பாஸ்போர்ட் மீட்பு
கடந்த ஜூன் 12-ம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்துச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 240 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்த 5 நிமிடங்களுக்குள் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற 56 வயதான ராஜு பட்டேல் என்பவர் முன்சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அவர், "விபத்து நிகழ்ந்த முதல் 20 நிமிடங்களுக்கு அருகிலேயே செல்ல முடியவில்லை; அங்கு தீ பயங்கரமாகப் பற்றி எரிந்துகொண்டிருந்தது.
மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததும், நாங்கள் அவர்களுக்கு உதவத் தொடங்கினோம். எங்களால் முடிந்த உதவியைச் செய்தோம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
மீட்பு உதவிகளைச் செய்துகொண்டிருக்கும் வேளையில், எரிந்த நிலையிலிருந்த சூட்கேஸ் பெட்டிகளை எடுத்துள்ளனர். அதிலிருந்து 800 கிராம் தங்கமும், 80,000 ரூபாய் பணமும் கிடைத்துள்ளன.
மேலும், எரிந்த நிலையிலிருந்த பாஸ்போர்ட்கள் மற்றும் பகவத் கீதை புத்தகமும் கிடைத்துள்ளன. மீட்கப்பட்ட பொருள்களையெல்லாம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட பொருள்களெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.
இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் உடல்களை ஒப்படைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதுவரை 162 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 120 உடல்கள் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.