செய்திகள் :

சகோதரியிடம் ரூ. 17 கோடி பண மோசடி: கைதான அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!

post image

பண மோசடி புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜா, தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளராக இருக்கிறார்.

இவர் தனது சகோதரியிடம் ரூ. 17 கோடி மோசடி செய்த வழக்கில், மலேசியா தப்பிச் செல்ல முயன்ற நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளர் எஸ்பிஎஸ் ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

"கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பி.எஸ். ராஜா(தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளர் ) இன்று(புதன்கிழமை) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது

மண்வெட்டியால் மகளை அடித்துக்கொன்ற தந்தை!! நெல்லையில் பரபரப்பு!

சரியாக கவனிக்காததாக கூறி மண்வெட்டி கணையால் மகளை அடித்துக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கட்... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை உயரும்!

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஓட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு- வடமே... மேலும் பார்க்க

ஜி.கே. மணி மருத்துவமனையில் அனுமதி!

பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான ஜி.கே. மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனும... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது! - முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்

திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டதாக அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாநகராட்சியின் குறைந்த வேக செயல்பாடு, குடிநீர், சொத்து வர... மேலும் பார்க்க

ஜூன் 20ல் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்! - இபிஎஸ் அறிவிப்பு

'மா' விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திமுக அரசைக் கண்டித்தும் வருகிற ஜூன் 20 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் என்று அதிமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி ... மேலும் பார்க்க

பாமக எம்எல்ஏவுக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருளுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்திக்க சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க