செய்திகள் :

Pakistan: இஸ்ரேல் - ஈரான் மோதலால் அச்சத்துக்குள்ளாகும் பாகிஸ்தான்; அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

post image

ஈரானில் இருக்கும் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதால், பல ஈரானிய ராணுவ அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஈரானும் எதிர்த்தாக்குதலைக் கொடுத்துவருகிறது. இஸ்ரேல் - ஈரான் மோதலில் ஏற்கனவே 220-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஈரானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் பாகிஸ்தான் இஸ்ரேலைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகளும் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதற்குப் பொறுப்பேற்க வேண்டும்." எனத் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து விளக்கி அரசியல் ஆய்வாளர்கள், ``ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களும், அதனால் வலுவடைந்துவரும் மோதலும், ஈரான் எல்லையைக் கடந்து பாகிஸ்தானைப் பாதிக்குமோ என்ற அச்சத்தைத் தூண்டியிருக்கிறது. அதனால்தான் ஈரானுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே இருக்கும் மோதல் போக்கையும் கடந்து ஈரானுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தான் வழியாக ஈரானுடன் 905 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பாகிஸ்தான், ஜூன் 15 முதல் பலுசிஸ்தானில் ஐந்து எல்லை வாயில்களை மூடியிருக்கிறது.

கடந்த சில நாள்கள் 500க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள், முக்கியமாக யாத்ரீகர்கள், மாணவர்கள் ஈரானிலிருந்து நாடு திரும்பி வந்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் - ஈரான் தலைவர் - பாகிஸ்தான் அமைச்சர்
இஸ்ரேல் பிரதமர் - ஈரான் தலைவர் - பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தானும் ஈரானும் தங்கள் பிரதேசங்களில் ஆயுதக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றன.

ஜனவரி 2024-ல், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் நடத்தியது. பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. அந்த மோதலுக்குப் பிறகு அண்டை இருநாடுகளும் சமாதானம் அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஈரான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்; அணு சக்தி கசிகிறதா? - பாதிப்புகள் என்ன... IAEA எச்சரிக்கை!

'ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது' - இது இஸ்ரேல்,3 ஈரான் மீது தாக்குதல் நடத்த முன்வைத்த குற்றச்சாட்டு. கடந்த வெள்ளிக்கிழமை (மே 13) முதல், இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு திட்ட இடங்க... மேலும் பார்க்க

Meta: ``வாட்ஸ் ஆப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்" - ஈரானின் முடிவும் மெட்டாவின் பதிலும்

இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து வரும் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால் ஈரானின் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

DMK: "இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், திணறுகிறது திமுக" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

"பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாகப் பதில் சொல்லத் திராணியின்றி அமைச்சர் பரிவாரங்களை வரிசையாக அனுப்பும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த முறை அமைச்சர் நேருவைக் காவு கொடுத்திருக்கிறார்" என்று அ.த... மேலும் பார்க்க

Israel: ``இஸ்ரேல் நமக்காக மிக மோசமான செயலை செய்கிறது" - ஈரானை எதிர்க்கும் ஜெர்மன் சான்சிலர்

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாகக் குற்றம்சாட்டும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில், கனடாவில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் ஜெர்மன் Ch... மேலும் பார்க்க

'திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது' - திருமா உடனான சந்திப்பு குறித்து வைகைச்செல்வன்

விசிக தலைவர் தொல். திருமாவளவனும், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனும் சில தினங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு குறித்து திருமாவளவனிடம் கேட்டப்போது, "அதிமுக முன்னாள் அமைச்சர் ... மேலும் பார்க்க

'மக்களை உளவு பார்க்கிறதா வாட்ஸ்ஆப்?' குற்றம்சாட்டும் ஈரான் - வாட்ஸ்ஆப்பின் ரியாக்‌ஷன் என்ன?

இஸ்ரேல் - ஈரான் இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் அரசு அதன் குடிமக்களிடம் வாட்ஸ்ஆப்பை அவர்களது ஸ்மார்ட் போன்களில் இருந்து டெலீட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஈரான் அர... மேலும் பார்க்க