"என்னை நானே தேர்வுசெய்ய மாட்டேன்; ஆனால் என் முயற்சி..." - கம்பேக் குறித்து உமேஷ்...
பிறந்து 10 நாளில் தனித்தனியாக தத்துக்கொடுக்கப்பட்ட இரட்டையர்கள்; 17 ஆண்டுகள் கழித்து இணைந்ததெப்படி?
பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் வெவ்வேறு குடும்பங்களுக்கு தத்துக்கொடுக்கப்பட்ட இரட்டையர்கள் தாங்கள் சகோதரிகள் என அறியாமலே நெருங்கிய நண்பர்கள் ஆன நெகிழ்ச்சி சம்பவம், சீனாவில் நிகழ்ந்துள்ளது.
ஸாங் குவோஸின், ஹை சாவ் எனும் இரண்டு பெண்கள், சீனாவின் ஹெபே மாகாணத்தில் ஒரே நகரத்தில் வளர்ந்துள்ளனர்.
தற்செயலாக இருவரும் சந்தித்து சிறந்த நண்பர்கள் ஆகியுள்ளனர்.
இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர், தங்களால் இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியவில்லை என்று 10 நாட்களில் தத்துக்கொடுத்துள்ளனர்.
தத்துக்கொடுக்கும் போது அதன் முக்கிய நிபந்தனையாக, தத்துக்கொடுக்கப்படும் குடும்பங்கள் ஒரே நகரத்தில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஸாங் குவோஸின் மற்றும் ஹை சாவ் ஒரே நகரத்தில் வசித்து வந்துள்ளனர். ஒருவரை ஒருவர் தங்களின் 17 வயது வரை அறிந்து கொள்ளவில்லை.
அருகில் இருக்கும் துணிக்கடைக்கு சென்றபோது தற்செயலாக இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். அதன் பின்னர் சிறந்த நண்பர்கள் ஆகியுள்ளனர்.
இரண்டு வருட நட்புக்கு பின்னர், இருவருக்கும் ஒரே தேதியில் பிறந்த நாள் வருவதை அறிந்துள்ளனர்.
அதன் பின்னர் குடும்பத்தினரிடம் விசாரித்த போது அவர்கள் தத்தெடுக்கப்பட்டவர்கள் என்ற உண்மை தெரியவந்துள்ளது.
நண்பர்களாக பழகிய இருவரும் உண்மையாகவே சகோதரிகள் என்று தெரியவந்தவுடன் இருவருக்கும் இடையே பாசம் அதிகரித்துள்ளது. அதை பின்னர் அருகருகே ஒரு வீட்டை வாங்கி ஒன்றாக வசித்து வருகின்றனர். இப்போது அவர்களுக்கு 37 வயதாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.