செய்திகள் :

"என்னை நானே தேர்வுசெய்ய மாட்டேன்; ஆனால் என் முயற்சி..." - கம்பேக் குறித்து உமேஷ் யாதவ்

post image

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலகட்டத்தில் குறிப்பாக, பும்ரா, ஷமி, சிராஜ் போன்றோருக்கு முன்பாக முன்னணி வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தவர் உமேஷ் யாதவ்.

கடைசியாக 2023-ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கெதிராக விளையாடிய உமேஷ் யாதவ். தனது சர்வதேச கரியரில் மொத்தமாக 57 டெஸ்ட் போட்டிகளில் 170 விக்கெட்டுகளும், 75 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுகளும், 9 டி20 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.

உமேஷ் யாதவ்

குறிப்பாக, 2015 ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது, இந்திய அணியில் முதல் வீரர் உமேஷ் யாதவ்தான் (18 விக்கெட்டுகள்).

ஐ.பி.எல்-லில் 148 போட்டிகளில் 144 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். நடந்து முடிந்த ஐ.பி.எல் எந்த அணியும் இவரை வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில், தனது கம்பேக் குறித்து உமேஷ் யாதவ் பேசியிருக்கிறார்.

ஸ்போர்ட்ஸ் டாக் ஊடகத்திடம் பேசிய உமேஷ் யாதவ், "மீண்டும் கம்பேக் கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் நிறைவடைந்திருக்கின்றன.

இப்போதைய நிலையில் என்னை நானே தேர்வு செய்ய முடியாது. சில போட்டிகளில் நான் விளையாட வேண்டும், உடற்தகுதி பெற வேண்டும்.

நான் மீண்டும் வருவதற்குச் சவாலான கிரிக்கெட் ஆட வேண்டும். உடற்தகுதி பெற்று மீண்டும் அணியில் கம்பேக் கொடுப்பதுதான் என்னுடைய முயற்சி." என்று கூறினார்.

உமேஷ் யாதவ்
உமேஷ் யாதவ்

மேலும், தனது கரியர் குறித்து பேசிய உமேஷ் யாதவ், "நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

இயல்பாகவே நான் வேகப்பந்து வீச்சாளர். சிறுவயதிலிருந்தே வேகமாகப் பந்துவீசி வருகிறேன். நான் எந்த அகாடமிக்கும் சென்றதில்லை.

அதனால்தான் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

உமேஷ் யாதவ்
உமேஷ் யாதவ்

ஒரு நிலக்கரி சுரங்கத் தொழிலாளியின் மகன் இங்கே இந்தியாவுக்காக விளையாடுகிறான். என்ன விஷயம் நடக்க வேண்டுமோ அது நடக்கும் என்று நான் நினைக்கிறேன்." என்றார்.

"கோலி இடத்தில் அந்த வீரர்தான் இறங்குவார்" - துணை கேப்டன் ரிஷப் பண்ட் ஓப்பன் டாக்

இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நாளை மறுநாள் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடுகிறது.கோலி, ரோஹித் இல்லாத அணி, புதிய கேப்டன்... மேலும் பார்க்க

"கேப்டன்சி வேண்டாம் என்று BCCI-யிடம் நான்தான் கூறினேன்; ஏனெனில்..." - மௌனம் கலைத்த பும்ரா

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நாளை மறுநாள் (ஜூன் 20) முதல் இங்கிலாந்துக்கெதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா விளைய... மேலும் பார்க்க

TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவை கிங்ஸ்

டிஎன்பிஎல் 15-வது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை லைக்கா கோவை கிங்ஸ் எதிர்கொண்டது. டாஸ் வென்ற லைக்கா கோவை கிங்ஸ் பில்டிங்... மேலும் பார்க்க

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. விறுவிப்பான ஆட்டம் | Photo Album

திண்டுக்கல் டிராகன்ஸ் & சேப்பாக் சூப்பர் கில்லீஸ்திண்டுக்கல் டிராகன்ஸ் & சேப்பாக் சூப்பர் கில்லீஸ்திண்டுக்கல் டிராகன்ஸ் & சேப்பாக் சூப்பர் கில்லீஸ்திண்டுக்கல் டிராகன்ஸ் & சேப்பாக் சூப்பர் கில்லீஸ்திண்... மேலும் பார்க்க

Kohli: ``சச்சினை விட கோலி சற்று வித்தியாசமான குணமுடையவர்..'' - விவரிக்கும் லெஜண்ட் ஆண்டர்சன்

இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் முதல் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கிறது.கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கோலி ஓய்வை அறிவித்ததால், 2014-க்கு பிறகு முதல்முற... மேலும் பார்க்க

"டெஸ்ட் ஓய்வை திரும்பப் பெறுங்கள்" - கோலிக்கு மகனின் குறிப்பு... இன்ஸ்டா பதிவை நீக்கிய அனுஷ்கா

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணிக்காக 2011 முதல் 14 ஆண்டுகளாக ரன் மெஷினாக விளையாடிவந்த விராட் கோலி, ஐபிஎல் தொடர் பாதியிலேயே மே 12-ம் தேதி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறி... மேலும் பார்க்க