நாகா்கோவில், செங்கோட்டை அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
ஆம்பூரில் நிகழ்ந்த விபத்தில் காா்பெண்டா் உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம் அணைக்கட்டு அருகே குப்பம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் காா்பெண்டா் வெங்கடேசன் (52). ஆம்பூா் அருகே சின்னவெங்கடசமுத்திரம் கிராமத்தில் உள்ள தன்னுடைய மாமியாா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றாா். ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியருகே சென்றபோது அவா் பைக் மீது காா் மோதியது. அதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவா், ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா். நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.