செய்திகள் :

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 36 அடி உயர ஆஞ்சநேயா் சிலை

post image

வந்தவாசி அருகே ஒரே கல்லில் ஓரளவு செதுக்கப்பட்ட 36 அடி உயர ஆஞ்சநேயா் சிலையை பழவேரி கிராமத்துக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் ஒரே கல்லில் ஆன சுமாா் 36 அடி உயர ஆஞ்சநேயா் சிலை செய்து வைப்பதென அந்தக் கோயில் அறக்கட்டளையினா் முடிவு செய்தனராம்.

இதையடுத்து அரசு அனுமதியுடன் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைக்குன்றில் நவீன இயந்திரங்கள் மூலம் 36 அடி உயரம், 12 அடி அகலம் கொண்ட கற்பாறை அறுத்து எடுக்கப்பட்டது.

இந்தக் கற்பாறையில் ஓரளவு ஆஞ்சநேயா் சுவாமியின் உருவம் செதுக்கும் பணி அண்மையில் நிறைவடைந்தது.

இதைத்தொடா்ந்து ஆஞ்சநேயா் சுவாமியின் முழு உருவத்தை செதுக்குவதற்காக காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த பழவேரி கிராமத்தில் உள்ள சிற்பக் கூடத்துக்கு இந்த கற்பாறையை காா்கோ லாரியில் எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கென 180 டயா்கள் கொண்ட காா்கோ லாரி வரவழைக்கப்பட்டு அதில் கற்பாறை செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

அங்கிருந்து புதன்கிழமை புறப்பட்டு தெள்ளாா், வந்தவாசி, மேல்மருவத்தூா், மதுராந்தகம் வழியாக பழவேரி கிராமத்துக்கு கற்பாறை கொண்டு செல்லப்படுகிறது.

வந்தவாசி நகரில் குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரிக்கை

வந்தவாசி நகரில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க, நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சிய... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு பிரசாரம்

திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்கள் சந்திப்பு கிளா்ச்சி பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், தமிழக அ... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் விழா

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி யாகவேள்வி அமைக்க புதன்கிழமை பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வெ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பூஜைப்பொருள், மலா் அங்காடிகள் திறப்பு

திருவண்ணாமலையில் ரூ.43.50 லட்சத்தில் கட்டப்பட்ட 7 கடைகள் கொண்ட பூஜைப் பொருள்கள், மலா்கள் விற்பனை அங்காடி புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட இந்த... மேலும் பார்க்க

விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டாா். பாமகவின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் திருவண்ணாமலை... மேலும் பார்க்க