செய்திகள் :

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! தில்லியில் அவசர தரையிறக்கம்!

post image

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

தில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்த நிலையில், லே விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மீண்டும் தில்லிக்கே திருப்பிவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் விபத்துக்கு பிறகு கடந்த 7 நாள்களில் அதிகளவிலான இந்திய விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம் மேற்கொள்ளவது பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஏர் இந்தியா கருப்புப் பெட்டி!

இன்னுமா? கேதார்நாத் மேகவெடிப்பு.. 12 ஆண்டுகளாக அடையாளம் காணப்படாமல் 700 உடல்கள்!

டெஹ்ராடூன்: கேதார்நாத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு நேரிட்ட மேகவெடிப்பின்போது சுமார் 4 ஆயிரம் பேர் பலியான சம்பவத்தில் 700க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.12 ஆண... மேலும் பார்க்க

ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு

இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் விரைவில் வரும் என அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இந்தியாவின் மொழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளா... மேலும் பார்க்க

மீண்டும்.. மீண்டுமா! பெங்களூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூரில் உள்ள கெம்பகௌடா விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கெம்பகௌடா விமான... மேலும் பார்க்க

3 நாள்களில் 3வது சம்பவம்,, ஒடிசாவில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

ஒடிசாவில் மேலும் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் மயூர்கஞ்ச் மாவட்டத்தில் பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப... மேலும் பார்க்க

நிலம்பூர் இடைத்தேர்தல்: 11 மணி நிலவரம்!

கேரளத்தின் நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி 30.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வ... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: ஸ்பைஸ்ஜெட் விமானம் ஹைதராபாத்தில் தரையிறக்கம்!

ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் அவசரமான தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத்-திருப்பதிக்கு இன்று காலை 6.10 மணிக்குப் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமா... மேலும் பார்க்க