செய்திகள் :

Emobot: செல்ஃபி மூலம் மன அழுத்தத்தைக் கண்டறியலாம்? எப்படி தெரியுமா?

post image

கேமராவின் முன் பக்கம் மூலம் மன ஆரோக்கியத்தை பகுப்பாய்வு செய்ய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாகி வருகிறது.

நூற்றுக்கணக்கான நோயாளிகளின் மனநிலையைக் கண்காணிக்கவும், அவர்களின் மனச்சோர்வு சிகிச்சையின் செயல்திறனை மதிப்பிடவும் Emobot என்ற செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாள் முழுவதும் முகபாவனைகளை பதிவு செய்து, அறிக்கையை வெளியிடுகிறது Emobot செயலி. இதனை நோயாளிகளின் நிலை அறிய மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து Emobot செயலியின் இணை நிறுவனர் சாமுவேல் லெர்மன் கூறுகையில் ”எமோபாட் செயலி பிரான்சில் ஒரு மருத்துவ சாதனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு செயலியை பரிந்துரைக்க மனநல மருத்துவர்களுடன் இணைந்து செயல்படுகிறது.

நோயாளிகளின் பதில்களைக் கண்காணிக்கவும், அவர்களின் மனநிலை திடீரென மோசமடைவதைக் கண்டறியவும் மற்றும் மீண்டும் நோய் ஏற்படும் அபாயத்தைக் கண்டறியவும் இந்த செயலி மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கிறது.

இந்த செயலி நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாலும், எதிர்கால பதிப்புகளை தொலைபேசி மைக்ரோஃபோன் வழியாக கேட்க வாய்ப்பு இருப்பதாலும் மக்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற பயம் ஆரம்பத்தில் இருந்தது.

கேமரா பின்னணியில் செயல்பட்டுக் கொண்டே இருந்தாலும், கேமராவிலிருந்து எந்த புகைப்படங்களும் மைய தரவுத்தளத்திற்கு அனுப்பப்படுவதில்லை அல்லது சேமிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவை பயனரின் தொலைபேசியில் AI ஆல் செயலாக்கப்பட்டு நீக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.

50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 14,000-க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள் கூடியிருந்த VivaTech 2025 நிகழ்வில் ஆரோக்கியத்தை மேம்படுத்த AI மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக சாமுவேல் லெர்மன் தெரிவித்துள்ளார்.

SpaceX: பரிசோதனையில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம்; ஸ்பேஸ் எக்ஸ் விளக்கம் | Viral Video

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசா மற்றும் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து பல முக்கியப் பணிகளைச் செய்துவருகின்றது. குறிப்பாக, ஸ்பேஸ் எக்ஸ் உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் விமானத்தை உருவாக்குவதில் தீவ... மேலும் பார்க்க

கேரளாவில் அவசரமாக தரையிறங்கிய உலகின் காஸ்ட்லியான ஃபைட்டர் ஜெட் - வானில் செய்யும் சாகசங்கள் என்னென்ன?

பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35 ஸ்டெல்த் போர் விமானம் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து 48 மணி நேரங்களுக்கும் மேலாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நிற்கிறது.F-35 விமானம்,... மேலும் பார்க்க

``மனித மூளையை மிஞ்சும் நுண்ணறிவு AI'' - சூப்பர் இன்டெலிஜென்ஸ் குழுவை அமைத்த மார்க் ஜுக்கர்பெர்க்!

மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் புதிய ”சூப்பர் இன்டெலிஜென்ஸ்” குழுவை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தி நியூயார்க் டைம்ஸ் கூற்றுப்படி, மார்க் ஜுக்கர்பெர்க் தனி... மேலும் பார்க்க

இந்தியாவில் Starlink இணைய சேவை; 1 மாதம் இலவசம்.. தலைசுற்றும் விலை; எலான் மஸ்க் திட்டம் என்ன?

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், கடந்த வாரம் குளோபல் மொபைல் பெர்சனல் கம்யூனிகேஷன் பை சேட்டிலைட் (GMPCS) உரிமத்தை தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT) பெற்றுள்ளது. இதன் மூலம் உலகின் பல நாடுகளில்... மேலும் பார்க்க

நீல் மோகன்: இந்திய - அமெரிக்கரை தக்கவைக்க 100 மில்லியன் டாலர் வழங்கிய கூகுள்! - ஏன் தெரியுமா?

10 ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் நிறுவனம் ஓர் இந்திய - அமெரிக்க தொழிலதிபர், ட்விட்டர் நிறுவனத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக 100 மில்லியன் டாலர்கள் வழங்கியது என்றால் நம்ப முடிகிறதா?செரொதா நிறுவனத... மேலும் பார்க்க

Veo 3: சினிமாவின் எதிர்காலம் இதுதானா? - டெக் உலகை அதிரவைத்த கூகுளின் புதிய AI!

இந்த வாரத் தொடக்கத்தில் கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு I/O 2025 நடைபெற்றது. இதில் பல ஏஐ அப்டேட்களுடன் கூகுள், அதன் ஏஐ வீடியோ உருவாக்கும் மாடல் Veo 3 -ஐ வெளியிட்டது. இது கூகுள் ஃப்ளோ த... மேலும் பார்க்க